headlines

img

சாதிய அமைப்பை நொறுக்குவோம்!

“சாதிய ஒடுக்குமுறையும், சாதியப் பாகுபாடும் முதலாளித்துவ சமூக அமைப்பு முறைக்கு முன்பி ருந்தே ஆழமாக புரையோடிப்போயுள்ள, நீண்ட  வரலாறு கொண்டதாகும். முதலாளித்துவ வளர்ச்சியின் கீழ் மாற்றம் அடைந்த சமூகமும் சாதியக் கட்டமைப்போடு  சமரசம் செய்து கொண் டது. இப்போது இந்திய முதலாளித்துவம் தானே  சாதியப் பாகுபாட்டையும், ஒடுக்குமுறையையும் மேலும் வலுவாக பாதுகாக்கிறது. தலித் மக்க ளின் மிகப் பெரும்பான்மையானவர்கள்  உழைப்பாளி வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்; அந்த அடிப்படையில், சாதி அமைப்பு முறைக்கு எதிராகவும், தலித் மக்கள் மீதான சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் ஒன்றுபடு வதும், போராடுவதும் விரிவான தொழிலாளர் வர்க்க ஒற்றுமைக்கு முன் நிபந்தனை ஆகும். ஒரு  சமூக சீர்திருத்த இயக்கத்தின் மூலமாக சாதிய அமைப்பு முறையை ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டமும், அனைத்து வடிவங்களிலான சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட மும் இந்தியாவில் ஜனநாயகப் புரட்சியின் முக்கியமான பகுதி ஆகும். இத்தகைய, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமானது, வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத் துடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகும்.”

-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம், இந்தியாவில் சாதி ஒழிப்பு போராட்டத்திற் கான பாதையை மேற்கண்டவாறு தீர்க்கமான முறையில் வரையறை செய்துள்ளது. அந்தப் பாதையில் தொடர்ந்து உறுதியோடு நடை போடு கிறது. நாட்டின் எந்த மூலையில் பட்டியலின, பழங்குடி மக்கள் பாதிக்கப்பட்டாலும் அங்கே செங்கொடி இயக்கம் ஓடோடிச் செல்கிறது. அந்த மக்களோடு மக்களாக நின்று, நீதியை நிலை நாட்ட களத்தில் போராடுகிறது. 

கடந்த 9 ஆண்டு கால மோடி ஆட்சியின் கேடு கெட்ட கொள்கைகளால் மிக மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களும் தாக்குதலுக்கு உள்ளா னவர்களும் பட்டியலின, பழங்குடி மக்களே ஆவார். இம்மக்களுக்கான  எந்தச் சட்டமும் முறை யாக அமலாகவில்லை. சாதிய ஒடுக்குமுறைகள் மீது சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக் கப்படுவதில்லை. சாதிய அமைப்பு முறையை நியாயப்படுத்தும் மனுவாதக் கொள்கையை அமலாக்கும் ஒன்றிய பாஜக அரசு, பட்டியலின மாணவர்களின் கல்வி உதவித்தொகை உள்பட அனைத்து வகையான வாழ்வாதாரங்களையும் பறித்துள்ளது. பட்டியலினப்  பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் மிகப்  பெரும் அளவிற்கு  அதிகரித்துள்ளன. அதே போல வன மக்களின் உரிமைகளை முற்றாகப் பறிக்கவும் அவர்களது வாழ்வாதாரங்களை முற்றாக ஒழித்துக் கட்டவும் மோடி ஆட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது.

இத்தகைய பின்னணியில் தமிழ்நாட்டிலும் சாதிய பிடிமானத்தைத் தகர்க்க, சாதி ஆணவ ஒடுக்குமுறைகளை உறுதியோடு தடுத்து நிறுத்த வலுவான, நீண்ட போராட்டத்தை மேற்கொண் டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இன்றைய தினம் விழுப்புரத்தில் நடத்த உள்ள சிறப்பு மாநாடு, தமிழ்நாட்டை சாதியத்திற்கெதிரான களமாக மாற்றுவதை நோக்கி அழைத்துச் செல்லும் என்பது உறுதி.