கடந்த சில ஆண்டுகளாக ஒன்றிய பாஜக அரசின் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தை கள் பாதுகாப்பில் அதிகளவில் அக்கறை காட்டப் படுவதாகவும், அதிகளவு மகளிர் நலத்திட்டங் கள் செயல்படுத்தப்படுவது போன்ற ஒரு மாயை யான தோற்றம் மிகப் பெரிய அளவிலான விளம் பரங்கள் வாயிலாக கட்டமைக்கப்படுகிறது. ஆனால் தரவுகள் மற்றும் ஆய்வுகள் அடிப்படையில் பார்க்கும் போது நமது தேசம் ‘வளங்குன்றா வளர்ச்சி இலக்குகளை (sustainable Devel opment Targets)’ அடைவதில் மிகப் பெரிய தோல்வியை சந்தித்துள்ளது என்பதே உண்மை. தற்போதைய 33 சமூக நல காரணிகளில் மகளிர் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி இலக்குகளை அடைவதில் மோடி அரசு தோல்வியே அடைந்துள் ளது. நாட்டில் ஒரு மாவட்டத்தில் கூட குழந்தைத் திருமணங்கள் இல்லாத சூழலை காண முடிய வில்லை. மேலும் மிகவும் குறைந்த வயதில் பெண் கள் கருவுறுதல், பெண்கள் மீதான கணவரின் வன்முறைகளை தடுக்க முடியவில்லை.
குடும்ப வன்முறைகள் மட்டுமல்ல, நாடு முழு வதும் பொதுவெளியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்குற்றங் கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதைவிட இன்னும் அதிர்ச்சி தருவதாக, குஜ ராத் மாநிலத்தில் 2016-2020 இடைபட்ட நான் காண்டு காலத்தில் 40 ஆயிரம் பெண்கள் காணா மல் போயிருக்கிறார்கள் என்ற தகவல் வெளி யாகியுள்ளது. பெண் குழந்தைகள் கடத்தப்படு வது எவ்வித தடையும் இல்லாத தொடர் கதை யாக மாறியிருக்கிறது.
இத்தகைய வன்கொடுமைகள் மட்டுமின்றி, 479 மாவட்டங்களில் சமையல் செய்வதற்கு இப் போதும் கூட தூய்மையான எரிபொருள் இல்லாத நடைமுறை சூழலும் காணப்படுகிறது. 415 மற்றும் 215 மாவட்டங்களில் முறையே சுத்தமான குடி தண்ணீர் மற்றும் சுகாதாரமான முறைகளில் கை கழுவும் வசதிகள் இல்லை.
இதுபோன்ற கொடுமைகளால் அதிகளவில் பாதிக்கப்படுவது மிகவும் பின்தங்கியுள்ள, புறக் கணிக்கப்பட்ட போதிய வசதி வாய்ப்புகளை பெறாத பெண்கள் மற்றும் அமைப்புசாரா பெண் தொழி லாளர்களே. மோடி அரசு செயல்படுத்தி வரும் பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டம் உட்பட அனைத்து திட்டங்களை யும் பெண்களின் முன்னேற்றத்தைத் கருத்தில் கொண்டு அதிகப்படியான நிதி ஒதுக்கீடுகள் வாயிலாக ஆக்கப்பூர்வமாக அமலாக்க வேண்டியது அவசியம் ஆகும்.
பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் முதலீடு மற்றும் கடன் சலுகைகள், கடன் தள்ளு படிகள் பல லட்சம் கோடிகள் என்ற அளவிற்கு மோடி அரசால் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் சில லட்சம் கோடிகளை மகளிர் சார்ந்த நலத்திட்டங்களில் முதலீடு செய்ய மறுக்கிறது. பெண்களின் முன்னேற்றத்தை உறுதி செய்வ தன் மூலமே, நாட்டின் ஒட்டுமொத்த மனித வளத்தை பெருக்கச் செய்வதுடன் தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ‘வளங்குன்றா வளர்ச்சி இலக்குகளை’ எட்ட முடியும்.