உ.பி தேர்தல் முடிவுகள் வந்தபோது அம்மாநி லத்தின் முக்கியமான நகரங்களில் புல்டோ சர் பொம்மைகளைக் கையில் ஏந்தியபடி பாஜக வினர் வெறிக்கூச்சலுடன் பேரணி நடத்தினர். வரும் நாட்களில் புல்டோசர்கள் மேலும் வேக மாகச் செயல்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் என்று அப்போது அவர்கள் கூறியிருந்தனர். இதை மற்ற மாநில பாஜக அரசுகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளன. தில்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா எழுதிய கடிதத்தின் அடிப்படை யில் தில்லி வடக்கு மாநகராட்சி நிர்வாகம் முஸ்லீம் மக்கள் கணிசமாக வாழும் பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளை இடித்து தள்ளியுள்ளது.
இது அரசே தனது மக்கள் மீது கட்ட விழ்த்துள்ள பயங்கரவாதம் ஆகும். ஆக்கிர மிப்புகளை அகற்றுகிறோம்’ என்ற பெயரில் பாஜகவினரை எதிர்ப்போர் வீடுகளையும் கடை களையும் அகற்றி உளவியல் ரீதியாக பாஜகவை எதிர்ப்போருக்கு இதுதான் கதி என்று நெருக்க டியை ஏற்படுத்துகின்றனர்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கடைகள் இடிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த அதி காரிகள் மறுத்துவிட்டனர். அரசு நிர்வாகம் முழுவதும் காவிமயமாக்கப்படுவதோடு தற்போதுள்ள பிரச்சனைகளுக்கு முஸ்லீம் மக்களே காரணம் என்று கூறி உண்மை யான பிரச்சனைகளிலிருந்து மக்களைத் திசை திருப்பும் செயல்கள் இவை.
தில்லியில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் ஜஹாங்கீர்புரி பகுதியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நடத்தியபோது ஊர்வலத்தில் சென்ற பலர் தங்களது கைகளில் ஆயுதங்களை ஏந்திச் சென்றதோடு அங்கிருந்து மசூதிக்குள் நுழைய முயன்றனர். இது காவல்துறையினர் கண் எதிரே நடந்தது. ஆயுதங்களுடன் திரிந்த குண்டர்கள் இதுவரை கைது செய்யப்பட வில்லை. வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
பாஜக ஆளும் மத்தியபிரதேச மாநிலத்திலோ கல்வீச்சில் ஈடுபட்டவர்களுக்குப் பாடம் புகட்டப்படும் என்று கூறி அப்பாவி முஸ்லீம் மக்களின் வீடுகள் கடைகள் இடிக்கப் பட்டுள்ளன. ஆனால் வாசிம் விஷயத்தில் அது கூட சாத்தியமில்லை, ஏனெனில் அவரால் கற்களைத் தூக்கக்கூட முடியாது. ஏனென்றால் அவருக்கு இரண்டு கைகளும் கிடையாது. அவரது வீடு இடிக்கப்பட்டதால் அவரும் அவ ரது குடும்பத்தினரும் தெருவுக்கு விரட்டப் பட்டுள்ளனர்.
உண்மையிலேயே ஆக்கிரமிப்பு என்று இருந்தால் முன்கூட்டியே மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும். பொருட்க ளை எடுத்துச் செல்லக் கால அவகாசம் வழங்கி யிருக்கவேண்டும். இதுபோன்ற எந்தவொரு விதி முறைகளையும் பின்பற்றாமல் பாஜக அரசு கள் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு எதிராக மேற் கொண்டு வரும் நடவடிக்கைகள், நாட்டில் மத நல்லிணக்கத்தையும் மக்கள் ஒற்றுமையையும் சிதைத்துவிடும்.
நாட்டின் ஒருமைப்பாடு மீது அக்கறை உள்ள அனைவரும் இத்தகைய சட்டவிரோத செயல் களைத் தடுத்து நிறுத்த முன்வரவேண்டும்.