அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீதான தாக்குதல் நடந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வெளியிடப்படும் அறிக்கைகளில் “ வன்முறை” மற்றும் “கொலை” போன்ற வார்த்தைகளை இந்தியா கூட்டணிக் கட்சிகள் பயன்படுத்துவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. எதிர்க்கட்சி தலை வர்களின் பேச்சுக்கள் வன்முறையை தூண்டிவிடு வதாக உள்ளது என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் ஒன்றிய அமைச்சருமான அஸ்வினி வைஷ்ணவ் அலறுகிறார்.
2021 ஆம் ஆண்டு பிரதமரின் பஞ்சாப் பய ணத்தின் போது மாநில அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தவறிவிட்டதாக குற்றம் சாட்டும் பாஜக செய்தித்தொடர்பாளரான சுதான்ஷூ திரிவேதி, விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாகவே பஞ்சாப் மாநிலத்திற்குள் பிரதமர் நுழைய முடியவில்லை என்ற உண் மையை வசதியாக மறைத்துவிட்டார்.
பாஜக தலைவர்கள் இப்படிப் பேசுவது பிரதமர் மீதான அக்கறையால் அல்ல, மாறாக பிரதமர் மீது தங்களின் விசுவாசத்தை காட்டுவதற்கா கத்தான். இந்தியாவில் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக கடந்த பத்தாண்டுகளில் வன்முறையை தூண்டிவிட்டவர்கள் யார் என்பது அனைவ ருக்கும் நன்கு தெரியும்.
2004 ஆம் ஆண்டு இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவோடு காங்கிரஸ், மத்தியில் ஆட்சி அமை க்க தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் அத்தனை தலைவர்களும் சோனியாகாந்தி தான் பிரதமராக வரவேண்டும் என்று ஒருமித்த குரலில் கூறினார்கள். அது அக்கட்சித் தலைவர்களின் விருப்பம். ஆனால் இதற்கு எதிரப்பு தெரிவித்த ஒன்றிய முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சோனியாகாந்தி பிரத மராக பதவியேற்றால் தலையை மொட்டை அடித் துக் கொண்டு, வெள்ளைப் புடவை உடுத்திக் கொண்டு, கணவரை இழந்த கைம்பெண் போல் வாழ்வேன் என்று உச்சக்கட்ட வெறுப்பு அரசி யலை அரங்கேற்றினார்.
இதுமட்டுமல்ல பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்த மக்க ளவைத் தேர்தலின் போது எதிர்க்கட்சித் தலை வர்களுக்கு எதிராக குறிப்பாக ராகுல்காந்திக்கு எதிராக நாள்தோறும் விஷம் கக்கும் வகையில் மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினர். தேர்தலுக்கு பின்னரும் தொடர்ந்து வன்மமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படி நாள்தோறும் வன்முறையை தூண்டும் பாஜக தலைவர்கள், எப்படி பேசவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பாடம் நடத்துவது தான் வேடிக்கையாக உள்ளது. பாஜக தலைவர்க ளின் வெறுப்பூட்டும் பேச்சுக்களால் தான் மூட நம்பிக்கைக்கு எதிராக போராடிய நரேந்திர தபோல்கர், கோவிந்த்பன்சாரே, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், பேராசிரியர் கல்புர்கி ஆகியோர் கொல்லப்பட்டனர் என்பதை நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை.