ஹரிதா எனர்ஜி என்ற பெயரில் உள்ள அதானி யின் நிறுவனத்திற்கு 75ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒப்படைப்பதற்கான அங்கீகாரத்தை ஆந்திர அரசு வழங்கியுள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆந்திர மாநிலச் செயலாளர் வி.சீனி வாசராவ் இப்பிரச்சனையை கிளப்பியுள்ளார்.
அதானி குழுமம், பல்வேறு பெயர்களில் நிறு வனங்களை நடத்தி வருகிறது. எரிசக்தி, துறை முகங்கள், பாதுகாப்புத் தளவாடங்கள், விமான நிலையங்கள், சுரங்கங்கள், சிமெண்ட் ஆலைகள், தாமிர சுத்திகரிப்பு, பச்சை ஹைட்ரஜன், பெட்ரோ கெமிக்கல், சூரிய மின்சாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் டேட்டா சென்டர்கள், தொலைத்தொடர்பு உள்ளிட்ட அனைத்து துறை களிலும் ஆக்டோபஸ் போல கால் பரப்பி, கையில் கிடைப்பதையெல்லாம் சூறையாடி வரு கிறது. இதற்கு அதானியின் கூட்டுக்களவாணி யாக ஆட்சி அதிகாரத்தில் உள்ள மோடி அரசு துணைபோகிறது.
அதானி குழுமம் நாட்டின் பல்வேறு பகுதி களில் உள்ள வளங்களையெல்லாம், குறிப்பாக நிலங்களையெல்லாம் அரசு நிர்வாகங்களின் உதவியோடு கைப்பற்றி குவித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 5ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலங்களை விவசாயிகளிடம் இருந்து அடி மாட்டு விலைக்கு கையகப்படுத்தி, அதில் பிரம்மாண்டமான சூரிய மின் உற்பத்தி மையத்தை அமைத்து கோடிக்கணக்கில் லாபம் குவித்து வருகிறது அதானி நிறுவனம்.
இந்த நிலையில் ஆந்திரப்பிரதேசத்தில் வி.சீனிவாசராவ் எழுப்பியுள்ள பிரச்சனை முக்கி யத்துவம் வாய்ந்ததாகும். அதானி நிறுவனம் தனது நீர்மின்திட்ட ஆலையை அமைப்பதற்காக பார்வதிபுரம், அல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் 75 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டது. இதற்கு மாநிலத்தில் ஆளும் ஜெகன்மோகன் ரெட்டி அரசாங்கம் துணை போயுள்ளது. 15ஆயிரம் ஏக்கர் வனநிலங்கள் உள்பட 75ஆயிரம் ஏக்கர் நிலங்களை அதானி குழுமம் கையகப்படுத்திக் கொள்ள ஜெகன் மோகன் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலப்பகுதியில் பெரும் எண்ணிக்கை யிலான பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 5வது அட்ட வணையின்படி, வன நிலங்களை தனியாருக்கு தாரைவார்ப்பது சட்டவிரோதமாகும்.
இதுமட்டுமல்ல, சில தினங்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்தில் அதானி குழுமத்திற்கு, டேட்டா சென்டர் அமைப்பதற்காக 130 ஏக்கர் நிலத்தை வாரி வழங்கியுள்ளது ஜெகன் மோகன் அரசு. கடந்த பத்தாண்டு காலத்தில் ஆந்திரா வில் மட்டும் 2. 5 லட்சம் ஏக்கர் நிலங்கள் அதானி குழுமத்திற்கு கைமாறியுள்ளது. ஒரு மாநிலத்தில் மட்டும் இவ்வளவு நிலங்கள் என்றால் நாட்டின் பல பகுதிகளில் எவ்வளவு நிலங்கள்? எத்தனை லட்சம் விவசாயிகள் மற்றும் பழங்குடியினரின் வாழ்வாதாரம் பறிபோகும்? ஜெகன் மோகன் அரசு உடனடியாக ஒப்புதலை ரத்து செய்ய வேண்டும்.