headlines

img

முதலாளித்துவத்தின் தேவை

நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பா ளர்களை தேர்வு செய்வதற்கான உட்கட்சி பிரச்சாரம்  நடைபெற்று வருகிறது. இருப்பது இரண்டே கட்சி கள். ஒன்று, ஜனநாயக கட்சி. மற்றொன்று  குடியரசுக் கட்சி. இம்முறை இரு கட்சிகளும் உட்கட்சி ஜனநாயகத்தை கைவிட்டு, குறிப்பிட்ட  ஒரு நபரை மட்டுமே முன்நிறுத்தியுள்ளன. 

ஜனநாயக கட்சி, தனது ஜனாதிபதி வேட்பாள ராக தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனையே முன்னிறுத்தி உள்ளது. குடியரசு கட்சி தனது  வேட்பாளராக முந்தைய ஜனாதிபதி டொனால்டு  டிரம்பை முன்னிறுத்தியுள்ளது. இருவருமே கடைந் தெடுத்த முதலாளித்துவ ஆட்சியாளர்கள்தான். இருவருமே அந்நாட்டு மக்களுக்கும் உலக மக்க ளுக்கும் தீமையைத்   தவிர எதையும் பரிசளிக்கப்  போவதில்லை. இருவரது பிரச்சாரத்திலும், ஒரு வருக்கொருவர் தாக்கிப் பேசிக் கொண்டதோடு தேர்தல் பரப்புரை கூட்டங்களையே இழிவுகளின் உச்சத்திற்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடையே டிரம்ப், பென்சில்வேனியாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, அவர் மீது  துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அவரது காதில்  காயம் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் கூட விசாரணை நடக்கவில்லை; அதற்கு முன்பே டிரம்ப் மீது நடந்த  தாக்குதலுக்கு ஈரான் அரசுதான் காரணம் என  பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்து பதற்றத்தை யும் தூண்டியுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, டிரம்ப் தனது கட்சியின்  துணை ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக ஜெ.டி.வான்ஸ் என்பவரை தேர்வு செய்துள்ளார். இந்த நபர் குடியரசுக் கட்சியின் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் ஆவார். டிரம்ப்-க்கு மிக நெருக்க மானவர். அது மட்டுமல்ல, இஸ்ரேலின் தீவிர யூத  வெறிக்கு மிகப்பெரும் ஆதரவு அளிப்பதாக பகி ரங்கமாக அறிவித்தவர். பாலஸ்தீனர்களை கொன்று  குவிக்கும் இஸ்ரேலின் போர் வெறிக்கு முழு ஆதரவு  அளிப்பவர். அதுமட்டுமல்ல, அவர் அதிதீவிர வலது சாரி பாசிச கும்பல்களின் ஆதரவாளர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா துவங்கி இந்தியா வரை தேர்தல்களில் வலதுசாரிகளும், அதிதீவிர வலது சாரிகளும் பிரதான இடம் பெறுகின்றனர். மாற்று  சக்தியாக வேறு எவரையும் தேர்ந்தெடுக்க முடி யாதபடி, இரண்டில் ஏதேனும் ஒரு தீமையை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை முதலா ளித்துவ அமைப்பு முறை மக்களுக்கு அளிக்கிறது. உலகின் செல்வங்கள் அனைத்தையும் தங்களது  ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரத் துடிக்கும்  பெரும் கார்ப்பரேட் முதலாளிகள், மெகா கோடீஸ் வரர்கள் தங்களுக்கு ஏற்ற ஆட்சியாளர்களையே தேர்ந்தெடுக்கச் செய்ய வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளனர். இன்றைய முதலாளித் துவத்திற்கு கொடூர குணமும், மத, இனவெறியும்,  தீவிர கார்ப்பரேட் சேவகமும் ஒருங்கே அமையப் பெற்ற நவீன பாசிச ஆட்சியாளர்களே தேவை.  அதைத்தான் மீண்டும் டிரம்பின் வருகையும்  அவரது துணை ஜனாதிபதி வேட்பாளராக அதி தீவிர வலதுசாரி ஒருவர் முன்னிறுத்தப்படுவதும் காட்டுகின்றன.