கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற முஸ்லிம் பெண்களுக்கு உரிமையுண்டு என்று உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 125, ஜீவனாம்சம் பெறுவதற்கான மனைவியின் சட்டப் பூர்வ உரிமையைப் பேசுகிறது; இது முஸ்லிம் பெண்களையும் உள்ளடக்கியது என்று நீதிபதிகள் உறுதியான தீர்ப்பை வழங்கியுள்ளனர். “ஜீவனாம்சம் என்பது தொண்டு இல்லை. அது திருமணமான பெண்களின் உரிமை” என்றும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த தீர்ப்பு என்பது மத வேறுபாடின்றி திருமணமான அனைத்துப் பெண்க ளுக்கும் பொருந்தும் என்று கூறி பெண்களின் உரி மையை உச்சநீதிமன்றம் நிலைநாட்டியுள்ளது.
மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தலையிட மறுத்த தெலுங்கானா உயர் நீதிமன்றத் தின் உத்தரவை எதிர்த்து முகமது அப்துல் சமது என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தி ருந்தார். அந்த மனுவை விசாரித்தபோதுதான் நீதி பதிகள் முக்கியமான இந்த தீர்ப்பை வழங்கியுள்ள னர். “விவாக ரத்து பெற்ற முஸ்லிம் பெண் ஒருவர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) பிரிவு 125-ன் கீழ் ஜீவனாம்சம் பெற உரிமையற்றவர் என்ற மனுதாரரின் வாதத்தையும் நீதிபதிகள் நிராகரித்துள்ளனர். இந்த வழக்கில் முஸ்லிம் பெண்கள் (விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986-ன் விதிகளை அமல்படுத்த வேண்டும்” என்பதையும் நீதிபதிகள் ஏற்க மறுத்தது சரியானதே.
இந்த உத்தரவோடு நிற்காமல், இந்த அமர்வில் ஒருவரான நீதிபதி நாகரத்னா, ஒரு கணவன் தனது நிதி ஆதாரங்களை வருமான ஆதாரம் இல்லாத தனது மனைவியோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இந்த தீர்ப்பின் போது சில கருத்துக்களை தெரிவித்துள்ளது வரவேற்கத் தக்கது. மனைவியின் தனிப்பட்ட தேவைகளுக்கு நிதி ஆதாரங்களை வழங்குவதன் மூலம் மனைவி என்பவர் பொருளாதார ரீதியாக அதிகாரம் பெறு கிறார்; இதனால் சமூகமும் வலுப்பெறும் என்ற நீதி பதியின் கருத்து சரியான பார்வையில் தெரிவிக் கப்பட்டுள்ள கருத்தாகும். மனைவியின் “நிதி அதி காரம்” அப்பெண்ணை குடும்பத்தில் மிகவும் பாது காப்பானவராக மாற்றும். பல குடும்பங்களில் வேலைக்குச் செல்லும் திருமணமான பெண்கள் சம்பாதித்த பணத்தைக் கூட சுதந்திரமாக செலவ ழிக்க முடியாத நிலையில் உள்ளனர். சுயமாக சம்பாதித்தாலும் தங்கள் தனிப்பட்ட செலவுக ளுக்காக கணவரை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இவர்கள் நிலையே இப்படியென்றால் வீட்டு வேலைகள் அனைத்தையும் பார்க்கும் ஊதியம் இல்லா பெண்களின் நிலை மிகவும் மோசம். இல்லத்தில் உள்ள மனைவி என்பவர், கணவன் மற்றும் அவனது குடும்பத்தாரின் அன்பு, பாசம், ஆறுதல் மற்றும் மரியாதை ஆகியவற்றைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்காமல் குடும்ப நலனுக்காக நாள் முழுவதும் உழைக்கிறார்; அவர் அதிகாரம் பெறுவதன் மூலமே வலுவான சமூகம் உருவாகும், வலிமையான குடும்பத்துடன் கூடிய சமூகம் மட்டுமே வலிமையான தேசத்தையும் உருவாக்கும் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.