நவம்பர் 5, 2024 ஆம் தேதியன்று நடை பெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், முன்னாள் ஜனாதிபதியும், கடந்த தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியுற்ற டொ னால்டு டிரம்ப்பும் களமிறங்குகிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது. இருவரும் தங்கள் கட்சி களின் ஒப்புதல்களைப் பெற்றுவிட்டார்கள். அதி காரப்பூர்வ அறிவிப்பு முறையாக வெளிவரும்.
ஜோ பைடனா டொனால்டு டிரம்ப்பா என்ற கேள்வி மீண்டும் அமெரிக்க மக்கள் முன்பாக வைக்கப்பட்டுள்ளது. தனி நபர்களைத் தாண்டி, அமெரிக்க மக்கள் கட்சி சார்ந்து வாக்க ளிப்பது வாடிக்கையான ஒன்றாகும். அத னால்தான் கடந்த முறை டொனால்டு டிரம்ப் மீது கடுமையான அதிருப்தி நிலவுவதாகத் தோன்றினாலும் 47 விழுக்காடு வாக்குகளை அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற் போதும் அவர் சார்ந்துள்ள குடியரசுக்கட்சி அவ ரையே மீண்டும் நிறுத்த முடிவு செய்திருக்கிறது.
குடியரசுக்கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டுமே அதி தீவிர வலதுசாரிக் கொள்கைகளைப் பின்பற்றக்கூடிய கட்சிகளா கும். இரண்டு கட்சிகளுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகளில், ஓரளவு ஜனநாயக மற்றும் முற்போக்குக் கருத்துக்களைப் பேச விரும்புபவர்கள் ஜனநாயகக் கட்சியில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கி றார்கள் என்பது ஒன்றாகும். அமெரிக்காவில் பல கட்சிகள் இருந்தாலும், தேர்தல் போட்டி என்பது இந்த இரு கட்சிகளுக்கும் இடை யில்தான் இருந்து வருகிறது. அதற்கு பெரு நிறு வனங்கள் தரும் ஆதரவு முக்கியமான காரணமாகும்.
லாக்ஹீட் மார்ட்டின், ஆர்.டி.எக்ஸ், நார்த்ராப் கிரம்மன் ஆகிய மூன்று ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்கள்தான் உலகிலேயே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. வெறும் இந்த மூன்று பெரு நிறுவனங்களின் வருமானம் அமெ ரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு விழுக்காடாகும். இரு பெரிய கட்சிகளுக்கும் இந்த நிறுவனங்கள் நிதியை வாரி வாரி வழங்கு கின்றன. தேர்தலில் வெற்றி, தோல்வி இந்த நிறு வனங்களைப் பெரிய அளவில் பாதிப்பதில்லை. இரு கட்சிகளுமே உலகம் முழுவதும் எப்போதுமே பதற்றம் நிலவுவதையே விரும்புகின்றன. இரு தரப்புக்கும் ஆயுதங்களை வழங்குவதற்குக் கூட தயாராக இருக்கின்றன.
உலகம் முழுவதுமுள்ள இடதுசாரிகள் அமெ ரிக்காவின் இந்த மனிதகுல விரோதக் கொள் கைக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறார்கள். போர் நடவடிக்கை பாதுகாப்பைத் தராது என்று இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியும் கருத்து தெரி வித்திருக்கிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் கூடுதல் பலம் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறி யுள்ளது.