நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துப் பேசுவார், சபைக்கு வெளியே, நாடாளுமன்ற வளாகத்தில், வாங்க பேசலாம் என்று எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுப்பார். ஆனால் உள்ளே எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதி கிடைக்காது. கடந்த பத்தாண்டு காலமாக நடந்தது அதுதான். மீறிப் பேசினால், குரல் எழுப்பினால் கூண்டோடு வெளியேற்றம்; அவை யிலிருந்து நீக்கம் ஆகியவைதான் நடந்தது.
கடந்த 17ஆவது நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடரில் 150 உறுப்பினர்களை இடை நீக்கம் செய்துவிட்டுத் தானே சர்ச்சைக்குரிய மூன்று குற்றவியல் சட்டங்களை மோடி அரசு எவ்வித விவாதமுமின்றி நிறைவேற்றிக் கொண்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரலை ஒடுக்குவதை தானே மோடி அரசு செய்து தனது காரியத்தை பூர்த்தியாக்கிக் கொண்டது.
நாடாளுமன்றத்தில் மட்டுமின்றி வெளி யிலும் எதிர்க்கட்சியினர், அரசியல் செயற் பாட்டாளர்கள், அறிவுஜீவிகளின் குரலை ஒடுக்கியது கடந்த பத்தாண்டுகால மோடியின் ஆட்சி. அதனால் தானே கடந்த முறை 303 இடங்கள் பெற்றிருந்த பாஜக இந்த முறை 240 ஆக சுருண்டது. 400க்கு மேல் கேட்ட மோடிக்கு நாட்டு மக்கள் அளித்த பதில் தானே இந்த 240. ஆனாலும் கூட தனது பழைய பாதையிலிருந்தும் செயல்பாடுகளிலிருந்தும் கொஞ்சமும் பாஜகவும் மோடியும் மாறவில்லை என்பதே தெளிவாகத் தெரிகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் களை பேசவிடாமலும் பேச்சின் பெரும்பகுதி யை அவைக் குறிப்பிலிருந்து நீக்கியும் மக்களின் குரலை ஒலிக்கவிடாமல் செய்தது மோடி அரசு. ஆனால் தற்போது வழக்கம்போல் நாடாளு மன்ற வளாகத்தில் பேசிய மோடி, எனது குரலை ஒடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அபாண்டமாகப் பழிபோட்டிருக்கிறார்.நாடாளுமன்றம் நாட்டு மக்களின் பிரதிநிதி கள் தங்கள் கருத்துக்களை எடுத்துரைக்கவும் மக்களின் குரலை பிரதிபலிக்கவும் தான் உள் ளது. ஆனால் மோடி அவரது ‘மனதின் குரல்’ போல் மாற்றிட நினைக்கிறார். ஜெர்மனியின் ஹிட்லர் வானொலியில் உரையாற்றியதை முன்மாதிரியாகக் கொண்டு மோடி நிகழ்த்தும் மனதின் குரல் அல்ல நாடாளுமன்றம். இது மக்களின் - மக்கள் பிரதிநிதிகளின் மன்றம். எதிர்க் கட்சிகள் ஏழைகள், விவசாயிகள், இளை ஞர்கள், பெண்களின் முன்னேற்றத்துக்கும் நாட்டு ஒற்றுமைக்கும் கொடுக்கும் குரலை நசுக்கிடும் முயற்சியை நரேந்திர மோடி அரசு கைவிட வேண்டும். இல்லையேல் மீண்டும் நாட்டு மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள். அப்போது எதிர்க்கட்சியாகக் கூட அமரும் வாய்ப்பு பாஜகவுக்கு கிட்டாமல் போகும்.