நாட்டில் வேலையின்மை விகிதம், 1970களில் இருந்து முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. வேலையின்மை 6.1 விழுக் காடாக இருப்பதாக அரசு தரப்பில் வெளியிடப் பட்ட அறிக்கையை தேசிய புள்ளியியல் ஆணை யமும் ஏற்றுக் கொண்டது.இருப்பினும் மத்திய அரசு ஏற்கவில்லை. தனது கட்டுப்பாட்டில் உள்ள ஒரு துறை தயாரித்த அறிக்கையை பொய் என்று கூறிய ஒரே அரசு மோடி அரசாகத்தான் இருக்க முடியும். நாட்டில் மிக அதிகமான வேலைவாய்ப்பு களை ஏற்படுத்தித் தருவது சிறுகுறுந்தொழில்களே. பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றால் அவை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. இவற்றுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டும் அமைய வில்லை.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கிராமப்புற மக்களுக்கு குறைந்தபட்ச வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தக்கூடிய தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை மோடி அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முடக்கி வைத்துள் ளது. இதனால் ஏராளமான விவசாயத் தொழிலா ளர்கள் வேலையிழந்துள்ளனர். அதேபோல் மிகப்பெரிய அளவில் தம்பட்டம் அடிக்கப்பட்ட மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் வேலை வாய்ப்பை பெருக்கவில்லை. மென்பொருள் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் ஆயிரக்கணக்கா னோர் வேலையிழந்தனர். இந்த விஷயங்கள் அம்பலமானபோது மோடி என்றால் வளர்ச்சி என்ற பிம்பம் விழுந்து நொறுங்கியது. இந்த நிலையில் மத்திய அரசுத்துறைகளில் அவ்வப்போது கிடைக்கும் ஒரு சில வேலை வாய்ப்புகளையும் படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு தராமல் ஒழித்துக் கட்டும் ஆபத்தான முடிவை மோடி அரசு எடுத்துள்ளது. ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழி யர்களுக்கு மீண்டும் பணி என்பதே அந்த அறி விப்பு. ரயில்வே மற்றும் அறிவியல் துறைகளில் உள்ள ஒரு சில குறிப்பிட்ட பிரிவுகளில் மாதம் ரூ.35,000 ஊதியத்தில் இவர்கள் நியமிக்கப்பட வுள்ளனர். அரசுப் பணியில் இடைக்கால அதிகாரி களாக நியமிக்கப்பட்டு, நிரந்தர அதிகாரிகளின் பணியிடங்களைக் குறைத்து அதன் மூலம் செலவினங்களை குறைக்கப்போகிறார்களாம்.
முக்கியத் துறைகளில் குறிப்பிட்ட சில பிரிவு களில் நியமிக்கப்படும் ஊழியர்கள் தேவை யில்லை என்று அரசு கருதும்பட்சத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணியிலிருந்து நீக்கப்படு வார்கள் என்றும் அரசு தெளிவாக கூறிவிட்டது. வேலைவாய்ப்பு எனும் வெற்று வாக்குறுதியால் நாட்டு மக்கள் முன்பு பிரதமர் மோடி கேவலமாக தோற்றுப்போய் நிற்கிறார். ஓய்வுபெற்றவர்களை நியமிப்பதன் மூலமாக குறைந்தபட்ச வேலைவாய்ப்புகளையும் இளைஞர்களுக்கு கிடைக்கவிடாமல் செய்து விட்டார். இளைஞர்களின் எதிர்காலத்தை சூனிய மாக்கும் அரசின் இந்த மோசமான நடவடிக் கையை எதிர்த்து இளைஞர் அமைப்புகள் மட்டு மல்லாமல் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் எழுப்பவேண்டியது கட்டாயமாகும்.