தாய்லாந்து நாட்டில் உபர் கோப்பை பேட்மிண்டன் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய வலு வான அணிகள் சாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேட்மிண்டன் உலகமே எதிர்பார்க்காத வகையில் தென் கொரியா அசத்தி வருகிறது. காலிறுதியில் டென்மார்க்கை வீழ்த்திய நிலையில், அரையிறுதியில் பலமான ஜப்பானை 3-0 என்ற கணக்கில் புரட்டிஎடுத்தது. சனியன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சீனாவை எதிர்கொள்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக பேட்மிண்டன் துறையில் தென் கொரியா விற்கு மிகப்பெரிய பார்ம் கிடையாது. தென் கொரிய அணியில் இருந்த வீரர் - வீராங்க னைகள் சுமாராக தான் விளையாடி வந்தனர். திடீரென உத்வேகம் பெற்ற தென் கொரிய உபர் கோப்பையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிக்கு முன்னேறியுள்ளது. கடையாக 2016-ஆம் ஆண்டு தொடரில் இறுதிக்கு முன்னேறிய நிலையில், மலேசியாவில் நடை பெற்ற 2010-ஆம் ஆண்டு சீசனில் தென் கொரியா அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.