games

img

ஆசிய பேட்மிண்டன் போட்டி:சிந்து அதிர்ச்சி தோல்வி...வெண்கலத்துடன் வெளியேறினார்  

ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.  

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆசிய பேட்மின்டன் போட்டி நடைபெற்றது. இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பி.வி. சிந்து ஜப்பானின் அகேன் யெமகுச்சியை எதிர்கொண்டார்.

தொடக்க ஆட்டத்தில் 21-13 என்ற செட் கணக்கில் கைப்பற்றிய சிந்து, 2ஆவது செட்டிலும் பி.வி. சிந்து முன்னிலை வகித்து வந்தார்.  மேலும் சிந்துவுக்கு கிடைத்த நேரத்தை வீணடித்ததற்காக ஒரு புள்ளி பெனால்டி பெற்றதன் காரணமாக போட்டி முற்றிலுமா மாறியதால் சிந்துவால் முன்னிலையை நீட்டிக்க முடியவில்லை.

இறுதியாக வெற்றியாளரை முடிவு செய்யும் கடைசி ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்தே யெமகுச்சி ஆதிக்கம் செலுத்தி 0-3 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகித்தார். பி.வி.சிந்து ஒரு கட்டத்தில் 7-9 என்ற நிலைக்கு முன்னேறினார். ஆனால் அடுத்தடுத்து யெமகுச்சி எடுத்த புள்ளிகளால் முன்னேறினார். இறுதியாக 16-21 என்ற கணக்கில் சிந்துவை யெமகுச்சி வீழ்த்தினார்.        

இருவரும் இடையே நடந்த ஆட்டத்தில் 21-13, 19-21, 16-21 என்ற செட் கணக்கில் அரையிறுதியில் தோல்வியடைந்து பி.வி. சிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.