பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இருபாலர் பிரிவிலும் தொடக்க சுற்று முதலே பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து தனது காலிறுதி ஆட்டத்தில் சீனாவின் ஹீ பிங்கை 21-9, 13-21, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அறையிறுதிக்கு முன்னேறினார். இந்தியா சார்பில் ஒற்றையர் பிரிவில் சிந்து மட்டுமே அசத்தலாக விளையாடி வருகிறார். ஆடவர் இரட்டையர் பிரிவில் ராங்கி - சிராக் ஜோடி காலிறுதி வரை முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.