games

img

பாரா ஒலிம்பிக் -  மூன்று பிரிவுகளின் கீழ் பங்கேற்கும் பேட்மிண்டன் வீராங்கனை பாலக் கோலி 

டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 19 வயதே ஆன பேட்மிண்டன் வீராங்கனை பாலக் கோலி மூன்று பிரிவுகளில் பங்கேற்கும் சிறப்பை பெறுகிறார்.

பஞ்சாப் மாநிலம், ஜலந்தரைச் சேர்ந்த இளம் 19 வயதே ஆன பேட்மிண்டன் வீராங்கனை பாலக் கோலி மகளிர் ஒற்றையர், மகளிர் இரட்டையர், மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய மூன்று பிரிவுகளில் பங்கேற்கவுள்ளார். இதன் மூலம் பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் மூன்று பிரிவுகளில் பங்கேற்கும் இந்தியாவைச் சேர்ந்த முதல் வீராங்கனை என்ற சிறப்பை பாலக் கோலி பெற்றுள்ளார். 

முன்னதாக, இந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற உலக பாரா பேட்மிண்டன் போட்டியில் பாலக் கோலி வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

;