games

img

ஆடவர் பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் நித்தீஷ் தங்கம் வென்று அசத்தல்!

பாராலிம்பிக் தொடரின் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் குமார் நித்தீஷ் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

பாரீஸில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான பேட்மி்ண்டன் இறுதிப் போட்டி இன்று (செப். 2) நடைபெற்றது. இதில், இந்திய வீரர் குமார் நித்தீஷ், பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தேலை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 21 க்கு 14, 18 க்கு 21, 23 க்கு 21 என்ற புள்ளிக் கணக்கில் பெத்தேலை வீழ்த்தி நித்தீஷ் தங்கப் பதக்கம் வென்றார்.

பாராலிம்பிக்கில் தற்போதுவரை இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலத்துடன் பதக்கப்பட்டியலில் 22 ஆவது இடத்தில் உள்ளது.