கொரியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆடவர் போட்டியில் இந்தியாவின் எச். எஸ். பிரணாய் தோல்வியடைந்தார்.
தென் கொரியாவின் சன்சியான் நகரில் பால்ம ஸ்டேடியத்தில் கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி இன்று தொடங்கி ஏப்ரல் 10 ஆம் தேதி வரை நடைபெறும்.
இன்று தொடங்கிய கொரிய ஓபன் சூப்பர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகளான லக்ஷயா சென், எச்.எஸ். பிரணாய், கிதம்பி ஸ்ரீகாந்த் மற்றும் பி.வி. சிந்து உள்ளிட்டோர் விளையாடுகின்றனர். இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில், கொரியாவின் சோய் ஜி ஹூன்னை 14-21 21-16 21-18 என்ற செட் கணக்கில் லக்ஷயா சென் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
இதையடுத்து இந்தியாவின் எச். எஸ். பிரணாய் மற்றும் மலேசியாவின் ஜூன் வெய் சீம் எதிர்கொண்டனர். இதில் தொடக்க செட்டை 21-17 என்ற புள்ளி கணக்கில் மலேசிய வீரர் கைப்பற்றினார். 2ஆவது செட்டை 7-21 என்ற புள்ளி கணக்கில் மலேசிய வீரர் எளிதில் கைப்பற்றி பிரணாயை வீழ்த்தினார்.
41 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சுற்றில் 17-21, 7-21 என்ற செட் கணக்கில் பிரணாய் தோல்வியை தழுவினார்.