games

img

பேட்மிண்டன் வேல்டு டூர் இறுதிச்சுற்று : பிரான்ஸை வீழ்த்தி இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முன்னிலை

பேட்மிண்டன் வேல்டு டூர் இறுதிச்சுற்றில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரான்ஸ் நாட்டின் தோமாவை வீழ்த்தி முன்னிலை வகிக்கிறார்.    

இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் பேட்மிண்டன் வேல்டு டூர் இறுதிச்சுற்று இன்று முதல் 5 ஆம் தேதிவரை நடக்கிறது. மொத்தம் ரூ.11¼ கோடி பரிசுத் தொகைக்கான இந்த போட்டியில் உலக தரவரிசையில் ‘டாப்-8’ இடத்தில் உள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கிறார்.      

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த  தோமா ஜூனியர் போபோவை  21-14, 21-16 எனும் செட் கணக்கில் வீழ்த்தினார். அவர் அடுத்த ஆட்டத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த குன்லாவுத் விதித்சரனை எதிர்கொள்ள உள்ளார்.    

;