டென்னிஸ் உலகில் 4 கிராண்ட்ஸ்லாம் (3 ஒற்றையர், 1 இரட்டையர்) பட்டம் வென்ற 25 வயது இளம் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டி சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
திடீர் ஓய்வுக்கான வெளிப்படையான காரணம் எதுவும் ஆஷ்லி பார்டி கூறவில்லை. ஆனால் “வாழ்வின் மற்றொரு பகுதியையும் நான் ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சி அடைய வேண்டும். இனி ஆஷ்லி பார்டி விளையாட்டு வீராங்கனையாக இருக்கப்போவதில்லை” என தான் வெளியிட்டுள்ள வீடியோ தொகுப்பில் கூறியுள்ளார். கடைசியாக தனது சொந்த மண்ணின் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் (2022) தொடரை கைப்பற்றினார். தொடர்ந்து 121 வாரங்கள் உலகின் முதல் நிலை வீராங்கனையாக நீடித்த ஆஷ்லி பார்டி வெறும் 25 வயதில் ஓய்வு பெறுவது பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்
2019 - பிரெஞ்சு ஓபன் போட்டியிலும், 2021 - விம்பிள்டன் போட்டியிலும்,
2022 - ஆஸ்திரேலிய ஓபன் (இவை மூன்றும் ஒற்றையர் பிரிவு)
2018 - அமெரிக்க ஓபன் (மகளிர் இரட்டையர்)
இதுபோக 2019-ஆம் ஆண்டு உலக டூர் பைனல்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் உட்பட
15 சர்வதேச பதக்கங்களையும் ஆஷ்லி பார்டி வென்றுள்ளார்.