games

img

சுவாரஸ்யம் இல்லாமல் நகரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ்

ஸ்பெயின் நாட்டில் நடை பெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஐரோப்பா கண்டத்தின் மிக முக்கிய ஏடிபி தொடரா கும். கிராண்ட்ஸ்லாம் தொடர் அந்தஸ்து இல்லை என்றாலும் தனிச்சிறப்பு மற்றும் அங்கீகாரம் உள்ள டென்னிஸ் தொடராகும். இந்த தொடரில் வெற்றி பெறும் நபர்களுக்கு 17 கோடி பரிசு (ஒற்றையர் பிரிவு மட்டும். இரட்டையர் பிரிவுக்கு பரிசுத்தொகை சற்று குறை வாக மாறுபடும்) தரப்பட உள்ளது. இது போக 2-ஆம் பரிசு, அரையிறுதி முன் னேற்றம் என அனைத்து பிரிவுக ளுக்கும் போதுமான பரிசுகள் கிடைக் கும். இத்தகைய சிறப்புடைய மாட்ரிட்  ஓபன் டென்னிஸ் தொடர் நடப்பாண்டில் சுவாரஸ்யம் இல்லாமல் நடைபெற்று வருகிறது.  

இதற்கு முதல் காரணம் போட்டி யின் அட்டவணை வரிசை திட்டமிடா மல் நடத்தப்பட்டு வருவது தான். (காலி றுதி முழுமையாக நிறைவுபெறுவதற்கு முன் அதே நாள் மாலை அரையிறுதி தொடங்குவது). இரண்டாவதாக வீரர் - வீராங்க னைகள் அதிரடியாக விளையாடாமல் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பொதுவாக முக்கிய மான ஏடிபி டென்னிஸ் தொடரில் 3-வது சுற்று ஆட்டத்தை தாண்டினால் அடுத்து வரும் ஆட்டங்கள் வீரர் - வீராங்கனை களின் அதிரடியால் அனல் பறக்கும். ஆனால் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடி வரும் அனைவ ரும் பயற்சி ஆட்டம் போன்று விளை யாடி வருகின்றனர். இதனால் காலிறுதி ஆட்டம் கூட குவாலிபயர் ஆட்டம் போன்று நடைபெற்று வருகிறது.  

சற்று ஆறுதலாக ஒற்றையர் பிரிவுக ளை விட இரட்டையர் பிரிவுகளில் கொஞ்சம் அதிரடியாக விளையாடி வரு கின்றனர். பங்கேற்பாளர்களின் மந்தமான செயல்பாட்டிற்கு காலநிலை எதுவும் ஏற்படுத்தவில்லை. அங்கு குளுமையான சீசன் தான் உள்ளது. வேறு புதிய காரணம் இருப்பதாக மாட்ரிட் டென்னிஸ் தொடர் எதுவும் வெளிப்படையாக இதுவரை அறிவிக்க வில்லை.  நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் டென்னிஸ் தொடரில் கள மிறங்கிய பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே காலிறுதியில் பங்கேற்காமல் உடல்நலக்குறைவு காரணமாக விலகுவதாக அறிவித்தார். நடப்பாண் டில் சூப்பர் பார்மில் உள்ள நடால் சக நாட்டு வீரரிடம் போராட்டம் இல்லாமல் வீழ்ந்தார். ஆனால் ஏதோ ஒன்று முக்கிய மான காரணம் உள்ளது. காரணத்தை திடமாக ஆய்வு செய்து அதனை  மாற்றி னால் அடுத்தாண்டு சீசனில் அனைத்து நட்சத்திரங்களும் பங்கேற்று தங்களது முழு திறன்களையும் வெளிப்படுத்தி இழந்த சுவாரஸ்யத்தை மீட்க முடியும். இல்லையென்றால் ஏடிபி-யில் சிறப்பு அந்தஸ்தை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.