சுமார் ரூ.400 கோடி பரிசுத்தொகை கொண்ட ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள கஜகஸ்தான் வீராங்கனையான ரைபகினா வை 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பெலாரஸ் வீராங்கனை சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
முதல் கிராண்ட்ஸ்லாம்
ஒற்றையர் பிரிவில் சபலென்காவிற்கு இது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற சபலென்கா ரூ.17 கோடி பரி சுத்தொகையை வென்றார். 2-ஆம் இடத்தை பெற்ற ரைபகினாவிற்கு ரூ.9 கோடி பரி சுத்தொகையும் வழங்கப்பட்டது.
பட்டம் வெல்வாரா ஜோகோவிச்?
ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத் தில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், தரவரிசையில் 4-ஆம் இடத்தில் இருப்பவரு மான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள கிரீஸின் சிட்சிபாஸை எதிர்கொள்கிறார். இந்த ஆட்டம் இந்திய நேரப் படி மதியம் 2 மணிக்கு நடை பெறுகிறது. சிட்சிபாஸ் இது வரை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பி டத்தக்கது.