games

img

கொரோனா பாதித்தாலும் விளையாடலாம் ஆஸ்திரேலிய ஓபன் நிர்வாகம் அறிவிப்பு

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் வரும் ஜனவரி 16-ஆம்  தேதி தொடங்குகிறது. ரூ.603 கோடி  செலவில் நடத்தப்படும் இந்த தொடரில் புதிய கொரோனா விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இதுதொடர்பாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இயக்கு நர் கிரைக் டிலி  கூறியதாவது, “ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடும் வீரர்கள், பணியாற்றும் ஊழியர்களி டம் தெளிவாக கூறிவிட்டோம், யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் வீட்டிலேயே இருந்துவிடுங் கள். கிரிக்கெட்டில் உள்ளது போல கொரோனா பாதிப்புள்ள வீரர் - வீராங்க னைகள் ஆஸ்திரேலிய ஓபனில் விளை யாடுவார்கள். ஒருவேளை மிகவும் (முற்றிய நிலையில் கொரோனா)உடல்நிலை சரியில்லையென்றால் வெளியே தங்கவும் பரிந்துரை செய்துள் ளோம்.  தனி மருத்துவர் கொரோனா பாதித்த வீரர்களை கவனித்துக் கொள்வார்” எனக் கூறினார். வீரர்கள், ஊழியர்களை பற்றியே புதிய கொரோனா விதிமுறைகள் அறி விக்கப்பட்டுள்ளன. ரசிகர்களுக்கு எந்த கட்டுப்பாடும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒசாகா விலகல்

முன்னணி வீராங்கனையும், 2 முறை (2019, 2021) ஆஸ்தி ரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பிய னான ஜப்பானின் நவோமி ஒசாகா ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொட ரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். திடீர் விலகலுக்கான காரணத்தையும் ஒசாகா அறிவிக்கவில்லை. ஆனால் ஒசாகா கடந்த 2 ஆண்டுகளாக தீவிர மனஅழுத்தம் காரணமாக பார்ம் பிரச்சனையில் சிக்கி இருந்தார் என தகவல் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.