நார்வே நாட்டில் பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொட ரில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியாவின் விஸ்வ நாதன் ஆனந்த் கிளாசிக்கல் சுற்றில் விளையாடிவருகிறார். கிளாசிக்கல் பிரிவின் 3-வது சுற்றில் சீனாவின் வாங் ஹாவை எளிய புள்ளிக்கணக்கில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார் விஸ்வநாதன் ஆனந்த். கிளாசிக்கல் பிரிவில் ஆனந்த்திற்கு இது ஹாட்ரிக் வெற்றி யாகும். முதல் இரண்டு சுற்றுகளில் லாக்ரேவ் (பிரான்ஸ்) மற்றும் வெசெலின் (பல்கேரியா) ஆகியோரை வீழ்த்தி யுள்ளார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த். விஸ்வநாதன் ஆனந்த் நீண்ட காலத்திற்கு பிறகு பார்மிற்கு வந்துள்ளதால் இந்திய செஸ் உலகம் மீண்டும் உற்சாகம் அடைந்துள்ளது.