செஸ் உலகின் முதன்மையான போட்டியான உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சென்னையில் நடை பெறும் செஸ் ஒலிம்பியாட் தொடர் முடிந்த பின்பு நடைபெறும் என அறிவிக்கப்படும். அதாவது 2023-ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடருக்கான கேண்டிடேட்ஸ் தொடர் சமீபத்தில் நிறைவு பெற்ற நிலையில், நடப்பு உலக சாம்பியன் கார்ல்சன் (நார்வே) - இயன் நிபோம்நிஷி (ரஷ்யா) ஆகியோர் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்நிலையில் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க ஆர்வமில்லை என கார்ல்சன் அறிவித்துள்ளார். இதற்கான காரணம் குறித்து வெளிப்படையாக கார்ல்சன் எதுவும் கூறவில்லை. கார்ல்சன் விலகளால் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சீனாவின் டிங் லிரெனை எதிர்கொள் கிறார் நிபோம்நிஷி. லிரெனை விட அனுபவத்தில் பலம் வாய்ந்தவர் என்பதால் நிபோம்நிஷி உலக சாம்பியன் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு வருவாரா?
உலக சாம்பியன்ஷிப் தொடரில் விலகினாலும் தமிழ்நாட்டில் நடைபெறும் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரில் நார்வே நாட்டின் சார்பில் கார்ல்சன் பங்கேற்கிறார். அதற்கு முன் குரோசியா கிராண்ட் செஸ் டூர் போட்டியில் விளையாடுகிறார்.
பார்ம் பிரச்சனை காரணமா?
விளையாட்டு உலகில் பார்ம் என்பது முக்கியமானது. விளையாடும் வீரர் - வீராங்கனைகளின் மனநிலை, குழப்பம், திடமில்லாமல் இருந்தால் போட்டிகளில் கவனம் செலுத்த முடியாது. உறுதி யான மனநிலை இல்லாத வர்கள் சற்றுமந்தமான சூழலுடன் விளையாடு வார்கள். இதை தான் பார்ம் பிரச்சனை என்று கூறு வார்கள். இந்த பிரச்சனை யால் தான் கார்ல்சன் சிக்கி யுள்ளார் என்பது கடந்த காலங்களில் அவரின் செயல்பாடு மூலம் அறியலாம். கடந்த 15 மாதங்களில் கார்ல்சன் கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை மட்டுமே திட மாக கைப்பற்றினார். அதன்பின் இறக்கம் தான். உலக டூர்களில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரும்பாலான பட்டங்களை இழந்தார். இதனால் தான் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து கார்ல்சன் விலகி இருக்கலாம். ஏற்கெனவே பார்ம் பிரச்சனையின் சொதப்பலான ஆட்டங்களால் ஏற்பட்ட தோல்வியால் உண்டான சர்ச்சை செய்திகள் இன்னும் வட்டமடித்துக் கொண்டிக்கும் நிலையில், உலக சாம்பியன்ஷிப்பில் சொதப்பினால் இன்னும் மோசமான அளவுக்கு பெயர் மற்றும் விமர்சன செய்திகள் உருவாகும் என்பதை உணர்ந்துள்ள கார்ல்சன் விலகல் முடிவை எடுத்துள்ளார்.