games

img

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் இறுதிச்சுற்று முதல் நாளில் பிரக்ஞானந்தா தோல்வி!

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் இறுதிச்சுற்று முதல் நாளில் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்துள்ளார்.    

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் ரேப்பிட் செஸ் போட்டியில் இந்தியரும், சென்னையைச் சேர்ந்த ஆர்.பிரக்ஞானந்தா பங்கேற்றுள்ளார்.  நடைபெற்ற அரையிறுதி போட்டியில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை 1.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.  

இந்நிலையில் நேற்று 11 ஆம் வகுப்புத் தேர்வை முடித்துக்கொண்டு இரவில் இறுதிச்சுற்றில் பிரக்ஞானந்தா கலந்துகொண்டார். இறுதிச்சுற்றில் சீனாவைச் சேர்ந்த உலகின் நெ.2 வீரர் டிங் லிரினுடன் பிரக்ஞானந்தா மோதி வருகிறார். இறுதிச்சுற்றின் முதல் நாளில் 2.51.5 என சீன வீரர் வென்று சீன வீரர் முன்னிலையில் உள்ளார்.  

29 வயது டிங் லிரின் முதல் ஆட்டத்தில் வென்றார். 2ஆவது ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வென்று அதனை சமன் செய்தார். ஆனால் 3ஈவது ஆட்டத்தில் மீண்டும் வெற்றி பெற்று 2-1 என முன்னிலை வகித்தார் டிங் லிரின்.  பிரக்ஞானந்தாவின் கடைசி ஆட்டம் டிரா ஆனது. இதனால் முதல் நாளில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றார்.  

இதையடுத்து 2ஆம் நாள் ஆட்டம் இன்றிரவு இந்திய நேரப்படி 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.   

;