“சந்திரயான் 2” விண்கலம் நிலவில் தரையிறங்கும் நாளன்று பிரத மர் மோடி இஸ்ரோ தலைமையகத்திற்கு (பெங்களூரு) சென்றார். “சந்திரயான் 2” முயற்சி தோல்வியடைய, பிரதமர் மோடி இஸ்ரோ தலைவர் சிவனை தட்டிக்கொடுத்து, இஸ்ரோ ஊழியர்களி டம் ஆறுதல் மற்றும் அறிவுரை என தனி ஷூட்டிங் நடத்தினார். இஸ்ரோ போல உலகக்கோப்பையை பறி கொடுத்த இந்திய அணியிடமும் அர சியல் ஆதாய சூட்டிங் நடத்தினார். இஸ்ரோ ஊழியர்கள் அறிவுரைகளை காது கொடுத்து கேட்பார்கள். காரணம் அவர்களின் துறை வேறு. ஆனால் விளையாட்டு வீரர்களின் துறை வேறு.
கடினமான பயிற்சி, அதிரடி மன நிலை உள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஆறுதல் என்ற வார்த்தை பிடிக்காது. எந்த தோல்வியாக இருந்தாலும் 1 மணி நேரம்தான் அமைதியாக இருப்பார்கள். அதன்பிறகு கையில் மண் இருந்தால் அதனை தட்டிவிட்டு போவது போல, தோல்வியின் வருத்தங்களை தட்டி விட்டு அடுத்த போட்டிக்கான பயிற்சிக்கு சென்று விடுவார்கள். இதுதான் விளை யாட்டு வீரர்களின் மனநிலை. இதனை அறியாமல் அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறேன் என்று ஷூட்டிங் எடுத்து பிர தமர் மோடி அவமானப்பட்டு திரும்பினார்.