games

img

உலகக்கோப்பை கிரிக்கெட் - இந்தியா 2023

அரையிறுதிக்கு முன்னேறுமா நியூஸிலாந்து? இன்று இலங்கையுடன் மோதல்

இந்தியாவில் நடைபெற்று வரும் 13-ஆவது சீசன் உலகக்கோப்பை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியாழனன்று நடைபெறும் 41-ஆவது லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன.

நியூஸிலாந்து

இதுவரை 8 ஆட்டங்களில் விளை யாடியுள்ள நியூஸிலாந்து அணி 4 வெற்றி, 4 தோல்வி என 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4-ஆவது இடத்தில் உள்ளன. தனது கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை நியூஸிலாந்து கண்டிப்பாக வீழ்த்த வேண்டும். தோல்வி கண்டால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளின் வெற்றி, தோல்வி, ரன்ரேட் கணக்கு களை எதிர்பார்த்தப்பின் அரை யிறுதிக்கு முன்னேறும் சூழல் உரு வாகும். இப்படி ஒரு இடியாப்ப சிக்க லில் சிக்கி விழிப்பதற்கு பதிலாக இலங்கை அணியை வீழ்த்தினால் நல்லது. இலங்கை அணியை வீழ்த்தி னால் 10 புள்ளிகளை பெற்று நேரடி யாக நியூஸிலாந்து அணி அரையிறுதி க்கு முன்னேறாது. பாகிஸ்தான் - இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளின் ஆட்ட முடிவுகளை பொறுத்து நியூஸிலாந்து அணியின் அரையிறுதி முடிவு இறுதி செய்யப்படும்.  இங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வென்றால் அந்த அணி 10 புள்ளிகளை பெறும், அதே போல தென் ஆப்பிரிக்கா அணிக் கெதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ் தான் அணி வெற்றி பெற்றால் 10 புள்ளி களை பெறும். இதனால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் நியூஸிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பைபெறும். நியூஸிலாந்து அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்று, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் தோல்வி கண்டால் நியூஸிலாந்து அணி எந்த சிக்கல் இல்லாமல் எளி தாக அரையிறுதிக்கு முன்னேறும். 

இலங்கை

முன்னாள் சாம்பியனான இலங்கை அணி பலமான மற்றும் அனுபவ வீரர்கள் குறைவு, பார்ம் தொய்வு உள்ளிட்ட பிரச்சனை யால் நடப்பு சீசன் உலகக்கோப்பை யின் 8 லீக் ஆட்டங்களில் விளை யாடி 6 தோல்வி, 2 வெற்றி என 4 புள்ளிகளுடன் அரையிறுதி  வா ய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது. அரையிறுதிக்கு தகுதி பெறும்  முனைப்பில் நியூஸிலாந்து அணியும், ஆறுதல் வெற்றியுடன் தாய்நாடு செல்லும் முனைப்பில் இலங்கை அணி யும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூஸிலாந்து - இலங்கை
இடம் : சின்னசாமி மைதானம், பெங்களூரு, கர்நாடகா
நேரம் : மதியம் 2:00 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஓடிடி - ஹாட்ஸ்டார் 
(இலவசம் - ஸ்மார்ட்போன் மட்டும். 
ஸ்மார்ட் டிவிக்களில் பார்க்க சந்தா கட்டணம்)

இனி வங்கதேசம்-இலங்கை அணிகள் எலியும் பூனையுமாக மாறும்

சர்வதேச கிரிக்கெட் உலகின் 146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற் றில் “டைம் அவுட்” முறையில் வீரர் ஒருவர் ஆட்டமிழப்பது முதல்முறை என்பதால் மேத்யூஸ் விவகாரத்தில் கடும் சர்ச்சை உருவாகியுள் ளது. ஆனால் முதல்தர கிரிக்கெட்டில் 6-க்கும் மேற்பட்ட தடவை “டைம் அவுட்” முறை அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருக்கின்ற விதியைத் தான் வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹாசன் கடைபிடித்துள் ளார். அவர் செய்தது சரியானதுதான். தவறு ஏதும் கிடையாது. ஷாகிப் அல் ஹாசன் விதியை நன்கு தெரிந்து வைத்துள்ளார். அதன் காரணமாகவே தனது புத்திசாலித்தனத் தால் ஏஞ்சலோ மேத்யூஸை வெளியேற்றியுள்ளார். அனைத்து தவறு களும் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் மீது உள் ளது. இந்த  விதிமுறை தற்போது புதிதாக கடைப்பிடிக்கப்பட்டு இருப்பதால் இலங்கை அணி கொந்தளித்துள்ளது. கிரிக்கெட் உலகில் எலியும், பூனையு மாக பகைமை (விளையாட்டில் மட்டும்) உணர்வுடன் பல்வேறு அணிகள் விளை யாடி வருகின்றன. இந்தியா -பாகிஸ்தா னும், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளும் எதிரெதிர் துருவங்களாக காலங்காலமாக மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றன. ஆனால் முன்னாள் சாம்பியனான இலங்கை அணிக்கு மோதல் போக்குடன் உள்ள  எதிரணி என்று எதுவும் கிடை யாது. போட்டியின் மீது சில எதிரணி களோடு மோதல் ஏற்படும். அதே ஆட்டத்தோடு மோதல் நிறைவுபெறும். மேற்கொண்டு மோதல் பின்தொடராது, வரலாறாகவும் மாறாது. ஆனால் சமீபகாலமாக இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. 2022 ஆசியக்கோப்பையில் இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு இடையே “நாகினி நடனம்” மூலம் மோதல் ஏற் பட்டது. இந்த மோதலை பின்தொடரா மல் இரு அணிகளும் அடுத்த 4 மாதங் களில் மறந்துவிட்டன. ஆனால் தற் போது மேத்யூஸின் “டைம் அவுட்” விவ காரம் மிக மோசமானது என்பதால் வரும் காலங்களில், கிரிக்கெட் உல கில் எலியும், பூனையுமாக இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.