games

img

உங்களை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம் - இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை பாராட்டிய விராட் கோலி

உங்களை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்  என இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை விராட் கோலி பாராட்டியுள்ளார்.

மகளிர் உலகக்கோப்பையில் மிதாலி ராஜ் தலைமையில் இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்க அணியிடம் போராடித் தோல்வியைச் சந்தித்தது. ஏற்கெனவே ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற நிலையில், அரை இறுதிப் போட்டிக்குள் நுழைய வேண்டும் எனில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவது அவசியம் என்ற கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது.

தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 2 பந்துகளில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த அணியின் வீராங்கனை மிக்னன் டு பிரீஸ் லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்தார். ஆனால் அது நாட் அவுட் ஆனதால்  2 பந்தில் 2 ரன் தேவைப்பட்டது. அடுத்த பந்து ஃப்ரீ ஹிட்டில் ஒரு ரன், அடுத்த பந்தில் மிட்விக்கெட்டில் பிளிக் செய்து ஒரு ரன் எடுத்து தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்திய அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. 

இந்நிலையில் 2022 உலகக் கோப்பையில் மிதாலி தலைமையிலான அணியின் இந்த அபார முயற்சிகளுக்கு விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் “நீங்கள் வெல்லும் போட்டியிலிருந்து வெளியேறுவது எப்போதுமே கடினமானது, ஆனால் எங்கள் பெண்கள் அணியால் தலை நிமிர்ந்து நிற்க முடியும். உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்று கோலி தெரிவித்துள்ளார். 

முன்னதாக, கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா அணியின் தோல்விக்கு ஆறுதல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

;