யு-20 உலகக்கோப்பை கால்பந்து
அர்ஜெண்டினாவுக்கு மாற்றம்
20 வயதிற்குட்பட்ட (யு-20) இளை யோர் உலகக்கோப்பை தொட ரின் 23-வது சீசன் வரும் மே மாதம் 20-ஆம் தேதி தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் நடைபெற விருந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் 3-ஆம் வாரத்தில் உலகக்கோப்பையில் இஸ்ரேல் நாடு பங்கேற்புக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பேரணிகள் நடை பெற்றது. குறிப்பாக தலைநகர் ஜகார்த்தா வில் இந்தோனேசிய மற்றும் பாலஸ் தீனக் கொடிகளை அசைத்தும் இஸ் ரேலை பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரம்மாண்ட பேரணியை நடத்தினர். மேலும் பாலி யின் ஆளுநர் இஸ்ரேல் அணியின் ஆட்டத்தை நடத்த எதிர்ப்பு தெரிவித்தும், இந்தோனேசியா கால்பந்து சம்மேள னத்தை முஸ்லீம்கள் பெரும்பான்மை யாக உள்ள நாட்டின் கால்பந்து சங்கம் (பிஎஸ்எஸ்ஐ) என அறிவித்தார். இந்த விவகாரம் புகாராக சர்வதேச கால்பந்து சம்மேளனத்திற்கு (பிபா) செல்ல, மார்ச் 29-ஆம் தேதி அவசரக் கூட்டத்தை கூட்டி இந்தோனேசியாவில் நடைபெற உள்ள 23-வது சீசன் கால் பந்து தொடரை ரத்து செய்தது பிபா. மேலும் இந்தோனேசியாவின் கால்பந்து கூட்டமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட மேம் பாட்டு நிதியையும் ரத்து செய்வதாக பிபா அறிவித்தது. இந்நிலையில் யு-20 உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்த அர்ஜெண்டினா நாட்டிற்கு வாய்ப்பு அளித் துள்ளது சர்வதேச கால்பந்து சம்மேள னம் (பிபா). அர்ஜெண்டினாவில் யு-20 உலகக்கோப்பை மே 20 முதல் ஜூன் 11-ஆம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பி டத்தக்கது.
ஐபிஎல் - 2023
சென்னை வீரரை சீண்டிய கோலிக்கு அபராதம்
திங்களன்று நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி பெங்களூரு அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் அதிரடி வீரர் ஷிவம் துபே 27 பந்துகளில் 52 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடினார். பெங்களுரு வீரர் பார்னல் வீசிய 17-வது ஓவரின் மூன்றாவது பந்தில் ஷிவம் துபே சிக்ஸர் அடிக்க முயன்று பவுண்டரி எல்லையில் முகமது சிராஜிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஷிவம் துபேவின் விக்கெட்டை கொண்டாடும் வகையில் பெங்களூரு அணியின் மூத்த வீரர் விராட் கோலி ஆக்ரோஷமாக கத்தியபடி கொண்டாடினார். விதிமுறையின்படி இது தவறானது என்பதால் விராட் கோலிக்கு போட்டிக் கட்டணத்திலிருந்து 10 சதவிகிதம் அபராதமாக விதிப்பதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதே போன்று 22-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா கேப்டன் ராணா - மும்பை வீரர் ஷோகீன் மோதிக்கொண்ட விவகாரத்தில் கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதமும், ஷோகீனுக்கு 10 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டது.
கம்பீர் இருப்பதால் சிறப்பு அந்தஸ்தா?
லக்னோ அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்க மறுப்பது ஏன்?
ஐபிஎல் தொடரில் வம்புக்கு இழுப்பது, சீண்டுவது, நடுவரின் தீர்ப்பை விமர்சிப்பது, வெற்றியை கொண்டாடும் பெயரில் எதிரணியை சீண்டுதல் என பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த விதிகளை மீறினால் விதிமீறல் பிரிவில் அபராதம் விதிக்கப்படும். தற்போதைய 16-வது சீசனில் விதிமீறலில் கோலி, ராணா, ஷோகீன் உள்ளிட்டோர் விதிமீறல் பிரிவில் அபராதம் பெற்றுள்ளனர். ஆனால் லக்னோ அணியின் வீரர்கள் விதிமீறல்கள் மட்டும் ஐபிஎல் நிர்வாகம் கண்டுகொள்ளாதது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பெங்களூரு அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ அணி. வெற்றியை கொண்டாடும் வகையில் லக்னோ வீரர் ஆவேஷ் கான் ஹெல்மெட்டை கீழே தூக்கி எறிந்தார். மேலும் லக்னோ அணியின் ஆலோசகர் கம்பீர் பெங்களூரு அணியின் ரசிகர்களை நோக்கி வாயை மூடுங்கள் என சைகை செய்தார். இந்த இரண்டு சம்பவங்களையும் ஐபிஎல் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்பியுமான கம்பீர் லக்னோ அணியின் ஆலோசகராக இருப்பதால் அந்த அணிக்கு அரசியல் மூலம் சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளதா என சந்தேகமும் எழுந்துள்ளது.
இன்றைய ஆட்டம்
ராஜஸ்தான் - லக்னோ
இடம் : சவாய் மான்சிங் மைதானம், ஜெய்ப்பூர்
நேரம் : இரவு 7:30 மணி