games

img

உலகக்கோப்பை கிரிக்கெட் - இந்தியா 2023

7-ஆவது வெற்றியை ருசிக்குமா இந்தியா? இலங்கையுடன் இன்று மோதல்

இந்தியாவில் நடைபெற்று வரும் 13-ஆவது சீசன் உல கக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடுக்கட்டத்தை தாண்டி யுள்ள நிலையில், புதனன்று நடை பெறும் 33-ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. நடப்பு சீசன் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்திக்காமல் தொடர் வெற்றி நடை யுடன் 6 ஆட்டங்களில் விளை யாடி, 6 வெற்றியை ருசித்து புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் கம்பீர மாக முதலிடத்தில் உள்ளது. அதே  போல இலங்கை அணி 6 ஆட்டங் களில் விளையாடி 4 தோல்வி, 2 வெற்றி என 4 புள்ளிகளுடன் 7- ஆவது இடத்தில் உள்ளது.  இந்த ஆட்டத்தில் இலங்கை அணி கட் டாயம் வென்றே ஆக வேண்டும். தோல்வி கண்டால் வெளியேற வேண்டிய சூழல் உள்ள நிலை யில்,  இந்திய அணியை வீழ்த்தி 6  புள்ளிகளுடன் அரையிறுதி கன வில் மிதக்கும் முனைப்பில் இல ங்கை அணியும், இலங்கை அணி யை வீழ்த்தி 7-ஆவது வெற்றியை ருசித்து முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கும் முனைப்பில் இந்திய அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக கள மிறங்குவதால் 33-ஆவது லீக் ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.(புள்ளிப்பட்டியல் நிலவரம் - புதனன்று)

இந்தியா - இலங்கை
இடம் : வான்கடே மைதானம், மும்பை, மகாராஷ்டிரா 
நேரம் : மதியம் 2:00 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஓடிடி - ஹாட்ஸ்டார் 
(இலவசம் - ஸ்மார்ட்போன் மட்டும். 
ஸ்மார்ட் டிவிக்களில் பார்க்க சந்தா கட்டணம்)

கருப்புக்குத் தடை

மராத்தா இடஒதுக்கீடு கோரி மகாராஷ்டிரா மாநிலத்தின் சில இடங்களில் திங்களன்று வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ-வான பிரகாஷ் சோலங்கியின் வீடும் கொளுத்தப்பட்ட நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழல் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா - இலங்கை ஆட்டம் நடைபெறும்  மும்பை மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மராத்தா இடஒதுக்கீடு கோரி மும்பை மைதானத்தில் வன்முறை மற்றும் போராட்டங்கள் நடைபெறாமல் ரசிகர்கள் கருப்பு உடை மற்றும் துணிகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவரைப் போன்ற அதிரடிக்கு யாரும் இல்லை

கிரிக்கெட் உலகில் சுவாரஸ்யமான சம்பவங்கள் பல உள்ளன. அதில் முக்கியமானது ஒரு சில வீரர்களை களத்தில் அதிக நேரம் விளையாட விட்டால் அது எதிரணிக்கு ஆபத்தில் முடியும்.  கடந்த காலங்களில் இந்தியாவின் சேவாக், ஆஸ்திரேலியா கில்கிறிஸ்ட், பாகிஸ்தானின் சயித் அன்வர், தென் ஆப்பிரிக்காவின் கிப்ஸ், இலங்கையின் ஜெய சூர்யா, நியூசிலாந்தின் மெக்குலம், மேற்கு இந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில், இங்கிலாந்தின் டிரஸ்கொதிக், வங்கதேசத்தின் லிட்டன் தாஸ், ஜிம்பாப்வேவின் ஆன்டி பிளவர் ஆகியோர் ஆபத்தான அதிரடி வீரர்கள் ஆவர். மேற்குறிப்பிட்டவர்களை 10 ஓவர்களுக்கு மேல் களத்தில் நிற்கவிட்டால் அன்றைய ஆட்டத்தில் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமல்ல எதிராணிக்கே சிரமம்தான். பந்தை பதம் பார்த்து வாணவேடிக்கை நிகழ்த்திவிடுவார்கள்.  கடந்த காலங்களில் இப்படி என்றால் தற்போதைய நவீன காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 13-ஆவது  சீசன் உலகக்கோப்பை தொடரில் ஒரே ஒரு நபர் மட்டுமே  அந்த அதிரடி பாணியை திட மாக உறுதியாக கையாண்டு வரு கிறார். அவர் பாகிஸ்தானின் பக்கர் ஜமான் என்ற வீரர் ஆவார். களத்தில் பார்ம் கிடைத்துவிட்டால் அன்று வாண வேடிக்கை நிகழ்த்தாமல் பெவிலியன் செல்ல மாட்டார்.  இந்தியாவின் ரோஹித் சர்மா, தென் ஆப்பிரிக்காவின் கிளாசன்,  நியூஸிலாந்தின் டேரில் மிட்சல் ஓரளவுக்கு மிரட்டினாலும் பக்கர் ஜமா னின் அளவிற்கு அவர்களால் அதிரடி பேட்டிங் செய்ய முடிய வில்லை. பேட்டிங் ஸ்டைலும், அதிரடி ஷாட்களில் கலக்கும் பக்கர் ஜமான் வங்கதேசத்திற்கு எதிரான 31-ஆவது ஆட்டத்தில் 7 சிக்ஸர், 3 பவுண்டரி என 74 பந்து களில் 81 ரன்கள் குவித்து கொல்கத்தாவில் வாண வேடிக்கை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.