இந்தியா - தெ.ஆ., தொடர் முழுவதும் மழையால் பாதிக்கப்படும் அபாயம்
2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி-20 என மூன்று விதமான தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், தற்பொ ழுது இரு அணிகளும் டி-20 தொடரில் விளையாடி வருகின்றன. முதல் டி-20 ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலை யில், செவ்வாயன்று நடைபெற்ற 2- ஆவது டி-20 ஆட்டம் மழைக்கு இடை யே நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா டிஆர்எஸ் முறைப் படி 5 விக்., வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், டி-20 தொடர் மட்டு மல்லாமல் டெஸ்ட், ஒருநாள் ஆகிய தொடர்களும் மழையால் கடுமையாக பாதிக்கப்படும் என அந்நாட்டு வானிலை அறிக்கைகள் மூலம் தகவல் வெளி யாகியுள்ளது. பார்ல், கேப்டவுனில் பிரச்சனையில்லை தென் ஆப்பிரிக்க நாட்டில் தற்பொ ழுது பருவமழை சீசன் ஆகும். நாட்டின் பசுமை மண்டலமான கிழக்கு, தென் கிழக்கு பகுதிகளில் அதீத அளவில் கனமழை புரட்டியெடுத்து வருகிறது. இத னால் கிழக்கு பகுதிகளில் உள்ள பெர்ஹா, ஜோஹன்னஸ்பர்க், செஞ்சுரி யன் ஆகிய மைதானங்களில் நடை பெறும் ஆட்டங்கள் மழையால் பாதிக்கப் பட வாய்ப்புள்ளது. பாலைவனம் போன்ற கரடு முரடான பகுதியான மேற்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளில் உள்ள பார்ல், கேப்டவுன் நகரங்களில் லேசான அளவில் மழைக் கான அறிகுறி உள்ளதால், இந்த இரண்டு நகர மைதானங்களில் நடைபெறும் ஆட்டங்கள் மழையால் (பெரியளவில்) பாதிக்கப்பட வாய்ப்பில்லை. கேப்டவுன் மைதானத்தில் 2-ஆவது டெஸ்டும், பார்ல் மைதானத்தில் 3-ஆவது ஒரு நாள் ஆட்டமும் நடைபெறும் நிலையில், மற்ற ஆட்டங்கள் பெர்ஹா, ஜோஹன் னஸ்பர்க், செஞ்சுரியன் நகர மைதா னங்களில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பதிலடி கொடுக்குமா இந்தியா?
இன்று கடைசி டி-20 ஆட்டம்
3 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரின் முதல் 2 ஆட்டங்க ளின் முடிவில் (ஒரு ஆட்டம் மழை யால் ரத்து) தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் (ஒரு ஆட்டம் மழையால் ரத்து) முன்னிலையில் உள்ள நிலையில், கடைசி டி-20 ஆட்டம் ஜோஹன்னஸ்பர்க் நகரத்தில் வியாழ னன்று நடைபெறுகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் தென் ஆப்பிரிக்க அணியும், பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறி யாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா
நேரம் : இரவு 8:30 மணி
இடம் : நியூ வான்டரெர்ஸ் மைதானம், ஜோஹன்னஸ்பர்க் (தெ.ஆ.,)
சேனல் : ஸ்டார்ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம் இல்லை. சந்தா கட்டணம் செலுத்தி இருந்தால் பார்க்கலாம்)
இன்றுடன் பெங்களூரில் லீக் ஆட்டங்கள் நிறைவு : நாளை புனேயில்...
புரோ கபடி தொடருக்கு இன்று விடுமுறை
குறுகிய காலத்தில் பிரபலமடைந் துள்ள புரோ கபடி லீக் தொடரின் 2-ஆம் கட்ட ஆட்டம் கர்நாடக தலைநகர் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. 2-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் புதனன்று நிறைவு பெற்ற நிலையில், வியாழனன்று புரோ கபடி தொடருக்கு விடுமுறை. தொடர்ந்து வெள்ளியன்று மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 3-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் நடைபெறு கின்றன.