games

img

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியா 2022

இறுதிப்போட்டி 
பாகிஸ்தான்- 
இங்கிலாந்து
நாள் : நவம்பர் 13-ஆம் 
தேதி (ஞாயிறு)
இடம் : மெல்போர்ன்

உலகக்கோப்பை வரலாற் றில் மிக மோசமான தோல்வியுடன் 8-வது சீசன் டி-20  உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது இந்திய அணி. இந்திய அணியின் தோல்வி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகிய நிலையில், வெளிநாட்டு மற்றும் கிரிக்கெட் விளையாடும் நாடுகள் இந்திய அணியின் தோல்வியை தலைப்பு செய்தியாக்கிவிட்டனர். இதில் முக்கியமாக இருப்பது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கல் வாகன் கூறிய கருத்துக்கள்தான். இந்திய அணியை மட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் வாரி யத்தையும் (பிசிசிஐ) மிக மோசமாக சாடியுள்ளார். இது குறித்து மைக்கேல் வாகன் கூறியதாவது,”50 ஓவர் உலகக்கோப்பையை வென்ற பிறகு  இந்தியா என்ன செய்தது? அப்படி  ஒன்றும் பெரிதாக எதையும் செய்ய வில்லை. காலம் மாறிவிட்டாலும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் காலா வதியான பழைய முறையிலேயே இந்தியா விளையாடி வருகிறது.

சுருக்கமாக சொன்னால் வெள்ளை பந்து கிரிக்கெட் (ஓயிட் பால் கிரிக்கெட்) வரலாற்றில் மிகவும் மோச மாக விளையாடும் அணியாக இந்தியா உள்ளது. ஐபிஎல் கிரிக் கெட்டில் விளையாடிய உலகின் எந்த வீரர்களும் தங்கள் விளையாட்டு திறனை எவ்வாறு வளர்த்துக்கொண் டோம் என்று பெருமையாக கூறு கின்றனர். ஆனால் இதுவரை இந்திய அணி அப்படி சிறப்பாக என்ன செய்துள்ளது என தெரியவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியத்தை (பிசிசிஐ) யாரும் விமர்சிக்க விரும்ப வில்லை. ஒருவேளை விமர்சித்தால் சமூகவலைதளத்தில் கடுமையாக தாக்கப்படுவீர்கள் என்ற ஒரு பயம் தான். இதில் நிபுணர்கள் மிகவும் மோசமாக பயப்படுகிறார்கள். கார ணம் இந்திய கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்தால் ஒரே நாளில் வேலை யிழந்துவிடுவோம் என்று கவலைப்படு கின்றனர். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் என்ன நடக்கிறது என நேரடியாக சொல்லும் நேரம் வந்து விட்டது. பிசிசிஐ தனது சிறந்த வீரர் களின் பின்னால் ஒளிந்துகொள்ளலாம். ஆனால் மொத்தமாக சரியான திசை யில் விளையாடும் சிறந்த அணியை பெறுவது தான் மிகவும் முக்கிய மான விஷயம் ஆகும். இந்தியா வில் பந்துவீச்சாளர்களின் எண்ணி க்கை மிகவும் குறைவு என்பதே கவலைக்குரிய விஷயம் என்றாலும், ஆழமான பேட்டிங் கிடையாது. போதாக் குறையாக சுழற்பந்து யுக்திகளும் இல்லை” என இந்திய கிரிக்கெட் உலகை வறுத்தெடுத்துள்ளார் மைக்கல் வாகன்.