விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி கத்துக்குட்டி ஹாங்காங்கை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி “சூப்பர் 4” சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆட்டம் முடிந்தவுடன் ஹாங்காங் வீரர்கள் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு தங்களது ஜெர்சியை பரிசளித்தனர். ஜெர்சியில்,”ஒரு தலைமுறைக்கே ஊக்கமாக இருந்ததற்கு நன்றி. நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்” என எழுதி பரிசாக அளித்துள்ளனர். இந்த நிகழ்வை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,”நன்றி ஹாங்காங் இது மிகவும் இனிமையானது” என பதிவிட்டுள்ளார்.
கடந்த சில காலமாக பார்ம் பிரச்சனையின்றி தவிர்த்து வரும் கோலிக்கு சொந்த நாட்டிலேயே ஆதரவு இல்லாத சூழ்நிலையில, ஹாங்காங் வீரர்கள் தங்களது ஜெர்சியில், “நாங்கள் உடன் இருக்கிறோம்” என ஆதரவு குரல் எழுப்பியுள்ளனர். முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் கோலிக்கு ஆதரவு குரல் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.