games

img

விளையாட்டு - இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி-20 தொடர் இன்று தொடக்கம்

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி-20 தொடர் இன்று தொடக்கம்

டெஸ்ட், ஒருநாள், டி-20 என மூன்று விதமான போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பய ணம் மேற்கொண்டுள்ளது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி. இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 3 போட்டிகளை கொண்ட டி-20 தொட ரின் முதல் ஆட்டம் விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறுகிறது. இரு அணிகளும் சீனியர் வீரர்கள் இல்லாமல் இளம்படையுடன் களமிறங்கு வதால் டி-20 தொடரின் 3 ஆட்டங்களும் பரபரப்பாக நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், இந்திய அணி சூர்யகுமார் தலைமையிலும், தென் ஆப்பிரிக்க அணி மார்க்ராம் தலைமையில் களமிறங்குகிறது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : கிங்ஸ்மீட் மைதானம், டர்பன், தென் ஆப்பிரிக்கா
சேனல் : ஸ்டார்ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஹாட்  ஸ்டார் (ஒடிடி - இலவசம் இல்லை. சந்தா கட்டணம் செலுத்தி இருந்தால் பார்க்கலாம்)

புரோ கபடி லீக்
2-ஆவது வெற்றியை ருசிக்குமா தமிழ் தலைவாஸ்
இன்று பெங்கால் அணியுடன் மோதல்

10-ஆவது சீசன் கபடி தொடர் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், தற்பொழுது கர்நாடக மாநிலம் பெங்களூரில்  இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஞாயிறன்று 2 ஆட்டங்கள் நடைபெறும் நிலையில், முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி - பெங்கால் அணியை எதிர்கொள்கிறது. இரண்டாம் ஆட்டத்தில் தில்லி - ஹரியானா அணிகள் மோதுகின்றன. நட்சத்திர அணிகளில் ஒன்றான தமிழ் தலைவாஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பலமான தில்லி அணியை வீழ்த்திய நிலையில், புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து டாப் ஆர்டரில் பயணிக்க இரண்டாம் லீக் ஆட்டத்தில் பெங்கால் அணியை வீழ்த்தும் முனைப்பில் களமிறங்குகிறது.

தமிழ் தலைவாஸ் - பெங்கால்
(16-ஆவது லீக்)
நேரம் : இரவு 8 மணி

தில்லி - ஹரியானா
(17-ஆவது லீக்)
நேரம் : இரவு 9 மணி

ஐரோப்பாவிலிருந்து வெளியேறியதால் டம்மியாக்கும் திட்டத்தில் விளையாட்டு ஊடகங்கள்

கால்பந்து உலகின் முக்கிய நட்சத்திர வீரரான அர்ஜெண்டினா கேப்டனும், நடப்பு சீசன்  உலகக்கோப்பையை பெற்றுத் தந்த வருமான லயோனல் மெஸ்ஸி 20  ஆண்டு கள் ஐரோப்பா கிளப் அணிகளில் (பார்சிலோனா, பாரீஸ் ஜெர்மைன்ட்) விளையாடியவர். சமீபத்தில் அமெரிக்க கிளப் அணியான இன்டர் மியாமி அணிக்கு மாறினார்.  அதேபோல ரியல் மாட்ரிட், ஜுவன்டஸ், மான்செஸ்டர் யுனைடேட் உள்ளிட்ட ஐரோப்பிய அணிகளில் விளையாடிய போர்ச்சுக்கல் கேப்டன் ரொனால்டோ தற்பொழுது சவூதி அரேபிய கிளப் அணியான அல் நாசர் அணியில் விளையாடி வருகிறார்.  பிரேசில் கேப்டன் நெய்மர் பார்சி லோனா, பாரீஸ் ஜெர்மைன்ட் உள்ளிட்ட ஐரோப்பிய அணிகளில் விளையாடி, தற்போது சவூதி அரேபிய கிளப் அணி யான அல் ஹிலால் அணிக்காக விளை யாடி வருகிறார். மேற்குறிப்பிட்ட 3 வீரர் களும் ஐரோப்பிய கிளப் அணிகளுக் காக விளையாடிய பொழுது அடிக்கடி முக்கியச் செய்திகளாக வருவார்கள். ஆனால் தற்பொழுது மூவரும் வேறு கண்டங்களில் விளையாடிவருவதால் அவர்களை பற்றிய செய்திகளை  விளை யாட்டு ஊடகங்கள் புறக்கணித்து வரு கின்றன. அதாவது மெஸ்ஸி, ரொனால் டோ, நெய்மரை டம்மியாக்கும் திட்டத்தில் விளையாட்டு ஊட கங்கள் களமிறங்கியுள்ளன.