இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுத் தலைவரு மான (பிசிசிஐ) சவுரவ் கங்குலி புதனன்று டுவிட்டர் பக்கத்தில், “30 ஆண்டுகள் கிரிக்கெட் பயணத்தை நிறைவுசெய்து உள்ளதாகவும், இந்த பயணத்தில் உடன் இருந்த ஒவ்வொரு நபருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். பலருக்கும் உதவும் வகையில் ஒன்றை தொடங்க திட்ட மிட்டு இருப்பதாகவும், இந்த புதிய அத்தியாயத்திற்கும் அனைவரின் ஆத ரவு இருக்கும் என நம்புகிறேன்” என குறிப்பிட்டு இருந்தார். வெளிப்படைத் தன்மை அல்லாத இந்த கருத்தை கிரிக் கெட் உலகம் வேறு விதமாக திசை திருப்பியது. அதாவது பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து சவுரவ் கங்குலி விலகவுள்ளார் என வதந்தி வெளியாகியது. புதனன்று மாலை பிசிசிஐ செயலர் ஜெய்ஷா கங் குலி பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து விலக மாட்டார் என தெரிவித் தார். ஆனால் கங்குலி தனது டுவிட் பற்றி எவ்வித பதில் அறிக்கை வெளியிடவில்லை. இந்நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் சவுரவ் கங்குலி தனது ராஜினாமா குறித்த வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள் ளார். “நான் உலக அளவில் ஒரு புதிய கல்வி செயலியை அறிமுகப்படுத்து கிறேன். ராஜினாமா குறித்து வெளி யான வதந்திகள் குறித்து நான் ஆச்சரி யப்பட்டேன். இது ஒரு எளிய டுவீட். ராஜினாமா பற்றி எதுவும் நான் குறிப் பிடவில்லை” என தெரிவித்துள்ளார். கிரிக்கெட் துறையில் முதிர்ச்சியான அனுபவ நடவடிக்கையை கொண்டுள்ள கங்குலி திடீரென கல்வித்துறை பக்கம் கவனம் செலுத்த தொடங்கியிருப்பது குறித்து பல்வேறு தரப்பினரும் ஆச்சர் யத்துடன் பாராட்டு தெரிவித்து வருகின்ற னர்.