games

img

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கம்

இடதுசாரி ஆதரவு அரசியல் விமர்சகர்

புதிய கிரிக்கெட் வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் நஜாம் அஜீஸ் சேத்தி  (74)  இடதுசாரி கொள்கை ஆதரவாளர். பத்திரிகையாளர், தொழிலதிபர் என்ற அடிப்படையில் வாழ்க்கையை தொடங்கி, பாகிஸ்தானின் ஒன்றிய அமைச்சர், பஞ்சாப் மாகாண முதல்வர் பதவிகளை வகித்தவர்.  தி ஃப்ரைடே டைம்ஸ் பத்திரிகையின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து நாட்டின் பிரபல இடதுசாரி அரசியல் விமர்சகராக வலம் வந்தவர். நஜாம் சேத்தியின் நிர்வாக திறமையை நன்கு உணர்ந்த பாகிஸ்தான் விளையாட்டு அமைச்சகம், அனுபவமில்லாத கிரிக்கெட் துறை பொறுப்பான பாகிஸ்தான் சூப்பர் டி-20 லீக்கின் தலைவராக நியமிக்க பரிந்துரை செய்தது. சேத்தியின் நிர்வாகத்தால் பாகிஸ்தான் சூப்பர் டி-20 லீக் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. இதையடுத்து அவரது வேலைக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா நியமிக்கப்பட்டார். தான் பதவி ஏற்ற காலத்திலிருந்து பல அதிரடி மாற்றங்களை செய்த ரமீஸ் ராஜா, அனுபவமில்லா இளம் வீரர்களை அதிகம் களமிறக்கி பல வெற்றிகளை குவிக்க காரணமாக இருந்தார்.  இந்நிலையில், பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி  டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை புரட்டியெடுக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகத்தின் செயல்பாடு விமர்சன பொரு ளாக மாறியது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியி லிருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக நஜாம் அஜீஸ் சேத்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.