games

img

பர்மிங்ஹாம் டெஸ்டில் இனவெறி சர்ச்சை இந்திய ரசிகர்கள் மீது புகார்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் நடைபெறும் பர்மிங்ஹாம் நகரின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.  இந்த போட்டியில் இந்திய ரசிகர்கள் மோசமான வார்த்தை களால் எங்களை (இங்கிலாந்து ரசிகர்கள்) இனவெறியுடன் இழிவுபடுத்தப்பட்டதாகச் சமூகவலைத்தளங்களின் வழியாகச் புகார் அளித்துள்ளார்கள். மேலும் மைதான  நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றும் டுவிட்டரில் பக்கத்தில் சிலர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை  பதிவு (டேக்) செய்துள்ளனர். சமூகவலைத்தள புகாரை அடுத்து நாங்கள் (இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்) எட்ஜ்பாஸ்டன் மைதான நிர்வாகத்துடன் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவுள்ளோம் எனக் கூறியுள்ளது.

என்ன பிரச்சனை?

இங்கிலாந்து ரசிகர்களுக்கும், இந்திய ரசிகர்களுக்கும் தனிப்பட்ட மோதல் எதுவும் கிடையாது. முதல் நாள் முதலே இருநாட்டு ரசிகர் களும் நன்றாக தான் இருந்தார்கள். ஆனால் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுக்கும், இங்கிலாந்து நாட்டின் விக்கெட் கீப்பர் பேர்ஸ் டோவிற்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல்தான் இந்திய ரசிகர்களின் இனவெறி மோதலாக மாறி இருக்கலாம்.

டிஎன்பிஎல்  இன்றைய ஆட்டங்கள்

கோவை - சேலம்
நேரம்: மதியம் 3:15 மணி

திருச்சி - சென்னை
நேரம்: இரவு 7:15 மணி

(இரண்டு ஆட்டங்களும் திண்டுக்கல் என்பிஆர் மைதானத்தில் (நத்தம்) நடைபெறுகிறது)
 

;