games

img

விளையாட்டு...

ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இந்திய வீரர்  பிரியான்ஷீ சாம்பியன்

பேட்மிண்டன் உலகில் முக்கிய சர்வதேச தொடரான ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் தொடர் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றது.  இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தொடக்க சுற்று முதலே சிறப்பாக விளையாடிய இந்தியாவின் புதுமுகம் பிரியான்ஷீ ரஜாவத், தனது அரையிறுதியில் அயர்லாந்து வீரர் நட் நியென்னை வீழ்த்தி இறுதிக்குச் சுற்றுக்கு முன்னேறினார்.   இந்நிலையில், ஞாயிறன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் டென்மார்க் வீரர் மார்க்ஸை எதிர்கொண்டார் பிரியான்ஷீ. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரியான்ஷீ ரஜாவத் 21-15, 19-21, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

ஐபிஎல் - 2023

மும்பை மண்ணில் சென்னை அணிக்கு பிரம்மாண்ட ஆதரவு
ஐபிஎல் தொடரின் 12-வது லீக் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதின. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தியதால் மும்பை அணி திக்கு திணறி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் சென்னை ரசிகர்கள் போதுமான அளவில் குவிந்து இருந்தனர். மும்பை ரசிகர்கள் 60% (ஜெர்சி கணக்கின் படி) இருந்தனர். அணி சார்பில்லாமல் ஐபிஎல் விளையாட்டை பார்க்க 20% (ஜெர்சி இல்லாமல்) வந்திருந்தனர். மஞ்சள் ஜேர்சி அணிந்திருந்த சென்னை ரசிகர்கள் எப்பொழுதும் போல தொடக்கம் முதலே “சென்னை”,  “வி வான்ட் தோனி” என்ற கோஷங்களுடன் விசில் அடித்து ஆட்டத்தின் ஒவ்வொரு ஓவர்களுக்கும் உற்சாகமாக இருந்தனர். சென்னை அணியின் அதிரடி ஆட்டத்திறனும், ரசிகர்களின் அமோக ஆதரவை கண்டு எந்த அணிக்கும் சார்பில்லாமல் வந்த கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை ரசிகர்களு டன் இணைந்து, சென்னை அணிக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்ப, மும்பை நகரமே அதிர்ந்தது. தோல்வி  ஒரு பக்கம், சென்னை அணிக்கு பெருகிய ரசிகர்கள் ஆதரவு என இரட்டை அடியுடன் மும்பை வீரர்கள் மற்றும் அணி  குழுவினர் சோகத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

தமிழ்நாடு ரசிகர்களுடன் இணைந்த மராட்டியர்கள்

ஐபிஎல்-லில் உள்ள மற்ற அணிகளை காட்டிலும் சென்னை, மும்பை அணிகள் மாநில பெருமை தொடர்புடைய அணிகளாகும். அதாவது கிரிக்கெட்டை கடந்து, கிரிக்கெட் ஆர்வமில்லாத தமிழ்நாட்டினர் சென்னை அணிக்கும், மராட்டியர்கள் மும்பை அணிக்கும் ஆதரவளிக்கும் கிளை மேக்ஸ் உள்ள நிலையில், சனியன்று மும்பை மைதானத்தில் இருந்த மராட்டியர்களும், தமிழ்நாடு மற்றும் சென்னை அணி ஆதரவு ரசிகர்களுடன் இணைத்து சென்னை அணிக்காக கோஷமிட்டு கொண்டாடினர். (மராட்டியர்கள் சென்னை அணிக்கு ஆதரவு அளித்ததற்கான ஆதாரம் : மராட்டிய மொழியில் கோஷங்களும், சில பதாகைகளும் மைதானத்தில் இருந்தன)

இன்றைய ஆட்டம்
பெங்களூரு - லக்னோ 
  இடம்:சின்னசாமி மைதானம், பெங்களூரு  நேரம் : இரவு 7:30

கொளுத்தும் வெயில் : திணறும் வீரர்கள்

நாட்டில் கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது. கடந்த ஒரே வாரத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதியில் 2 டிகிரி செல்ஸியஸ் அளவிற்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் வீரர்கள் பயிற்சி பெற மற்றும் மதிய நேர ஆட்டங்களில் விளையாட கடுமையாக திணறுகின்றனர். முக்கியமாக ராஜஸ்தான், குஜராத், மும்பை, ஹைதராபாத் ஆகிய மைதானங்களில் மதிய நேர ஆட்டம் என்றால் வீரர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே வெப்பம் கொளுத்தி வரும் நிலையில், நடப்பு வாரத்தில் 2 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் அளவில் மேலும் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.