games

img

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் 2 புதிய வீரர்கள்  

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் புதிதாக 2 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.        

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. தென்னாப்பிரிக்காவுக்கான எதிரான ஒருநாள் போட்டி வரும் 19 ஆம் தேதி பார்லில் உள்ள போலண்ட் பார்க்கில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் ஜெய்ந்த யாதவ் மற்றும் நவ்தீப் சைனி ஆகிய இரு வீரர்களும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.  

அதனைதொடர்ந்து 2வது போட்டி ஜனவரி 21 ஆம்  தேதியும் பார்லில் நடைபெறும். 3வது ஒருநாள் போட்டி ஜனவரி 23 ஆம் தேதி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நிறைவடையும்.     

இந்திய அணி:  

கேஎல் ராகுல் (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா(துணை கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்) , யுஸ்வேந்திர சாஹல், ஆர் அஷ்வின், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், எம்.டி. சிராஜ், ஜெயந்த் யாதவ், நவ்தீப் சைனி.   

;