ஆடவர் மட்டும் கலந்துகொள் ளும் மெக்ஸிகோ ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலை யில், காலிறுதி ஆட்டத்தில் நடப்பாண்டின் முதல் கிரா ண்ட்ஸ்லாம் சாம்பியனான ரபேல் நடால் (ஸ்பெயின்), அமெரிக்காவின் டாம்மி பாலை 6-0, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரை யிறுதிக்கு முன்னேறினர். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உல கின் முதல் நிலை வீரரான ரஷ்யாவின் மெத்வதேவ், ஜப்பானின் நிஸிகோவாவை 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன் னேறினார். இளம் நட்சத்திரம் கிரீஸின் சிட்சிபாஸ், பிரிட்ட னின் கேமரான் ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறி னர்.
மீண்டும் நடால் - மெத்வதேவ் மோதல்
அரையிறுதி ஆட்டங்கள் சனியன்று காலை நடைபெறு கிறது. முதலாவது அரை யிறுதியில் சிட்சிபாஸ் (கிரீஸ்) - கேமரான் (பிரிட்டன்), இரண்டா வது அரையிறுதியில் நடால் (ஸ்பெயின்) - மெத்வதேவ் (ரஷ்யா) ஆகியோர் பலப் பரீட்சை நடத்துகின்றனர். சமீபத்தில் நிறைவு பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் கடும் போராட்டத்துக்கு இடையே சாம்பியன் பட்டத்தை நழுவ விட்ட மெத்வதேவ் மீண்டும் நடாலை எதிர்கொள்கிறார். இந்த ஆட்டத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.