தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விராட்கோலி விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய சுற்றுப்பயணம் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் உள்ளன. மேலும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 11 முதல் 15 ஆம் தேதி வரையிலும், ஒரு நாள் சர்வதேச தொடர் ஜனவரி 19 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக மும்பையில் இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஒருநாள் போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டாலும், காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விராட்கோலி விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
விராட் கோலி தன்னுடைய மகளின் பிறந்த நாள் 2022 ஜனவரி மாதம் வருவதால், அந்த நேரத்தில் குடும்பத்தாருடன் செலவிட விரும்புவதாக தெரிவித்தார். அதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து விலக்கு அளிக்கும்படி வாரியத்திடம் விராட் கோலி கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாக்கு இடையே எந்தவித மனக்கசப்பும் இல்லை, குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்காகவே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளன.