games

img

ஐபிஎல்:சென்னை அணியை விட்டு ஜடேஜா விலகவில்லை காசி விஸ்வநாதன் தகவல்

கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா நீக்கப் பட்டு தோனி புதிய கேப்டனாக நிய மிக்கப்பட்ட நாளிலிருந்து சென்னை அணிக்குள் பல்வேறு அதிரடி தகவல் வெளியாகி வந்த  நிலையில், காயம் காரணமாக ஜடேஜா ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள் ளார்.  ஜடேஜா விலகல் குறித்து பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் வெளியாகி வரு கின்றன. தனது கேப்டன் பதவி நீடிப்புக்கு யாரும் ஆதரவு தரவில்லை என்பதால் அடுத்த சீசனில் ஜடேஜா விளையாட மாட்டார் எனவும், சென்னை அணியிலிருந்து மொத்தமாக விலகுகிறார் என்ற தகவல்கள் வெளியாகியது.   ஜடேஜா தொடர்பாக வெளி யாகும் கருத்துக்களை சென்னை அணியின் நிர்வாக குழு உறுப்பி னர் காசி விஸ்வநாதன் மறுத்துள் ளார். சென்னை அணியின் வருங்காலத் திட்டங் களில் ஜடேஜா நிச்சயம் உள்ளார். மருத்து வர்களின் அறிவுரைப் படியே அவர் எஞ்சிய  ஐபிஎல் போட்டியி லிருந்து விலகியுள்ளார் என ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார்.