8-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 7 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் நடப்பு சாம்பியன் மற்றும் போட்டியை நடத்திய வங்கதேச அணி லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில், அதிகம் எதிர்பார்த்த பாகிஸ்தான் அணி அரையிறுதியில் வெளியேறியது. இந்நிலையில் 2022-ஆம் ஆண்டின் ஆசிய சாம்பியன் யார் என்ற மகுடத்திற்கான இறுதி ஆட்டம் சனியன்று சைல்ஹெட் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி இந்திய வீராங்கனைகளின் மிரட்டல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களே மட்டுமே சேர்த்தது. 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 8.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்து 8 விக்கெட் டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 7வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது.