games

img

செஞ்சுரியன் டெஸ்ட் : முதல் இன்னிங்சில் இந்தியா 327 ரன்கள் குவிப்பு

தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பய ணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளை யாடி வருகிறது. 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட்  தொடரின் முதல் ஆட்டம் ஞாயிறன்று தென் ஆப்பிரிக்காவின் முக்கிய நகரான செஞ்சுரியன் சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது.   டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி தொடக்க வீரர் கே.எல்.ராகுலின் (123) அபார சதத்தின் உதவியால் 105.3 ஓவர்களில் 327 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா மதிய உணவு இடைவேளையின் பொழுது 7 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்துள்ளது.