பள்ளிச் சிறுவர்களை போன்று நடந்து கொள்ளும் கவுதம் கம்பீர்
பிரச்சனையை வேண்டுமென்றே உருவாக்கி கோலியுடன் மீண்டும் மோதல்
ஐபிஎல் தொடரின் 43-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு - லக்னோ அணிகள் மோதின. நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் மிக பரபரப்பாக நடைபெற்ற ஆட்டம் என்று சொல்லும் அளவிற்கு பெங்களூரு - லக்னோ ஆட்டம் தொடக்கம் முதலே சுவாரஸ்ய மாக நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 126 ரன்களுக்கு சுருண்டாலும், தனது அபார பந்துவீச்சால் லக்னோ அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றியை ருசித்தது. ஆட்டம் பிரச்ச னையின்றி நிறைவு பெற்றாலும், ஆட்டம் முடிந்த பின்பு இந்திய அணி யின் முன்னாள் வீரரும், லக்னோ அணி யின் ஆலோசகரும், பாஜக எம்பியு மான கவுதம் கம்பீர் பிரச்சனையை கிளப்பி விட்டார். எதிரணிகளிடம் பேசக்கூடாது என்று விதிகள் எதுவும் உள்ளதா? பெங்களூரு அணியின் மூத்த வீரரும், இந்திய அணியின் நட்சத்திர வீரருமான விராட் கோலி ஆட்டம் முடிந்த பின்பு லக்னோ வீரர்கள் மற்றும் அணி குழுவினர்களிடம் கைகொடுத்து விட்டு, லக்னோ அணியின் தொடக்க வீர ரும், மேற்கு இந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரருமான மேயர்ஸ் விராட் கோலியிடம் நட்புணர்வில் ஆலோச னை கேட்டார். கோலி விளக்கம் அளிப்பதற்கு முன்பே, சம்பவ இடத் திற்கு வந்த கம்பீர் பள்ளிச் சிறுவர் களை போன்று “நீ அவரிடம் பேசக் கூடாது” என்ற தோனியில் மேயர்ஸின் கையை பிடித்து இழுத்துச் சென்றார். கோலி கண்டுகொள்ளவில்லை பேசா மல் நடையை கட்டினார். ஆனால் கம்பீர் வேண்டுமென்றேமுறைத்து கொண்டு வார்த்தைகளால் சீண்ட, கோலி சாது வாக விளக்கம் அளித்தார். ஆனால் கம்பீர் மோதலை உருவாக்கும் உட ல்வாகுவுடன் பேச கோலி தனது ஆக்ரோஷ ஸ்டைலை ஆரம்பித்து மோதலுக்கு தயாரானார். கைகலப்பு நிகழ்வதற்கு முன்னரே பெங்களூரு - லக்னோ குழுவினர் இருவரையும் சமா தானம் செய்து அழைத்துக்கொண்டு சென்றனர். அபராதம் மோதல் விவகாரம் தொடர்பாக கம்பீருக்கும் - கோலிக்கும் 100 % அபரா தம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் அறி வித்துள்ளது. அதைபோல விராட் கோலியுடன் லேசான அளவில் வார்த்தை மோதலில் ஈடுபட்ட லக்னோ வீரர் நவீன் உல் ஹக்கிற்கு (ஆப்கானிஸ் தான் வீரர்) 50% அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.
வெறுப்பு அரசியலை கிரிக்கெட்டிற்குள் புகுத்தும் கம்பீர்
ஐபிஎல் என்பது போட்டி மட்டுமல்ல குடும்ப, சகோதர உணர்வு கொண்ட கிரிக்கெட் தொடராகும். வெளிநாட்டு வீரர்களிடம் சகஜமான நட்பு, எதிரணி வீரர்களிடம் சண்டை இல்லா சகோதர உறவு, சொந்த வீரர்களிடையே குடும்ப உறவு மற்றும் நாடு, இனம், மதம் என பல்வேறு வேறுபாடுகளை களைந்து ஒற்றுமை உணர்வுகளை பிரதிபலிக்கும் தொடராக போற்றப்படும் ஐபிஎல் தொடரை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுகிறார் 41 வயதான கம்பீர். கடந்த மாதம் பெங்களூரு மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு ரசிகர்களை “வாயை மூடுங்கள்” என ஸ்லெட்ஜிங் செய்தார். தற்போது தங்கள் அணி வீரரிடம் பேசியதற்காக கோலியிடம் சண்டைக்கு பாய்ந்துள்ளார். நாட்டில் பாஜக எப்படி மதம், ஜாதி, மொழி அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்துகிறதோ அதே போல கிரிக்கெட்டில் இருந்து பாஜகவில் சேர்ந்து தில்லி பகுதியான எம்பியாகிய கம்பீர் கிரிக்கெட்டிற்குள் வெறுப்பு உணர்வை தூண்டி விடுகிறார் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. இதனை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்தால் நல்லது. இல்லையென்றால் கிரிக்கெட் விளையாட்டை வெறுப்பு உணர்வு சார்ந்த விளையாட்டாக மாற்றி விடுவார்கள் கம்பீர் - ஜெய் ஷா (அமித் ஷா மகன்) ஜோடி.
கர்நாடக அரசியல் ஸ்பாட்டாக மாறிய மோதல்
கோலி - கம்பீர் மோதல் கர்நாடக தேர்தல் களமாக மாறியுள்ளது. காரணம் கம்பீர் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதால் கோலிக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள், கன்னடர்கள், இந்திய அளவிலான பாஜக எதிர்ப்பாளர்கள், காங்கிரஸார்கள் எல்லாம் ஒன்று கூடி பாஜகவை துரத்திவிட்டார் கோலி என மீம்ஸ் செய்து கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தை வைத்து தேர்தல் டுவிட்டர் பக்கத் தில் ஹெஸ்டேக்கும் டிரெண்ட் ஆகி வருகிறது.
மூன்று முகம் இருந்தும் பொறுமை இல்லை
அன்று கம்பீர் பெங்களூரு ரசிகர்களை சீண்டினார். அதற்கு பதிலாக லக்னோ மைதானத்தில் கோலி பொதுவாக ஸ்லெட்ஜிங் செய்தார் அவ்வளவு தான். ஆனால் கோலி அன்று பொறுத்துக் கொண்டார். ஆனால் கம்பீர் பொறுத்துக்கொள்ளும் பக்குவம் இல்லை மீண்டும் கலகத்தை உருவாக்கி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். முன்னாள் வீரர், மக்களவை உறுப்பினர், ஒரு அணியின் ஆலோசகர் என மூன்று முகம் இருந்தும் ஒரு இளம் வீரரை சாதாரண பதிலடியை பொறுத்துக் கொள்ள முடியாமல் மீண்டும் மீண்டும் பிரச்சனையை அரங்கேற்றி வருகிறார் 41 வயது பாஜக எம்.பி. கம்பீர்