games

img

மைதானம் பற்றி எல்லாம் தெரிந்தும் இந்திய வீரர்களை குறை சொல்லும் கம்பீர்

மைதானம் பற்றி எல்லாம் தெரிந்தும் இந்திய வீரர்களை குறை சொல்லும் கம்பீர் லக்னோ மைதானத்தின் நிலைமை சாதாரண ரசிகர்களுக்கு கூட தெரிந்து அவர்கள் சமூக வலைத்தளங்களில் கண்டன கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் கிரிக்கெட்டில் சூப்பர் அனுபவம், பல்வேறு சாதனைகள் படைத்த இந்திய  அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் லக்னோ மைதான நிலைமைகளை மறைக்க இந்திய வீரர்களை குறை சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “ஆடுகளம் படுமோசமாக இருந்தாலும், கிரிக்கெட் வீரர்கள் சவாலாக எடுத்துக் கொண்டு விளையாடி இருக்க வேண்டும். ஒரு ரன் எடுக்க இளம் வீரர்கள் ரொம்ப கஷ்டப் படுகிறார்கள். இப்போது உள்ள தலைமுறை வீரர்கள் வலைப் பயிற்சியின் போது சுழற்பந்துவீச்சாளர்களை எப்படி சிக்சர் அடிக்கலாம் என்று மட்டுமே பயிற்சி எடுத்து வருகிறார்கள். பந்துகளை வீணடிக்காமல் சிங்கிள்ஸ் அடித்து விளையாடியிருந்தால் இந்திய அணி முன்கூட்டியே வெற்றி பெற்று இருக்கலாம். இளம் வீரர்கள் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்வது எப்படி என்பதை விரைவாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என வித்தியாசமாக கருத்து கூறியுள்ளார் கம்பீர். இந்தியா, நியூசிலாந்து என இரு அணி பேட்ஸ்மேன்களும் மைதானத்தில் ஒரு ரன் அடிக்கக் கூட மிகவும் பரிதாபமான நிலையில் திணறினர்.  ஆனால் இதையெல்லாம் கம்பீர் கண்டுகொள்ளாமல் கருத்து தெரிவிக்கிறார். கம்பீர் லக்னோ மைதானத்திற்கு ஆதரவாக இருப்பதற்கு ஒரு முக்கிய கிளைமாக்ஸ் உள்ளது. அது யாதெனில் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசனையாளராக இருப்பதால் லக்னோ மைதானத்திற்கு முட்டு கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.