games

img

ஆஸி., வீரர் டிராவிஸுக்கு கொரோனா

கொரோனா கட்டுப்பாடு களை மீறி உலகில் ஆங்கா ங்கே விளையாட்டுப் போட்டி கள் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில் 90% விளையாட்டு தொடர்கள் கொரோனா பாதுகாப்பு வளை யத்தில் தான் உள்ளன. பாதுகாப்பு வளையம் எனக் கூறினா லும் கொரோனா தன் பங்கிற்கு களமிறங்கி விளையாடி தொடரை ரத்து செய்துவிட்டு திரும்புவது வாடிக்கையாகி வருகிறது. ஏற்கெனவே பாகிஸ்தான் மண்ணில் நடை பெற்ற கிரிக்கெட் தொடர் மற்றும் ஐரோ ப்பாவில் நடைபெற்ற ஒன்றிரண்டு கால்பந்து தொடர் என பல்வேறு தொடர்களை கொரோ னா ரத்து செய்துள்ளது.

தற்போது இந்த வரிசையில் பாரம்பரிய விளையாட்டு தொடரான ஆஷஸ்  தொடரும் கொரோனாவால் விழி பிதுங்கி வருகிறது. ஆஸ்திரேலியாவில் நடை பெற்று வரும் நடப்பாண் டிற்கான ஆஷஸ் டெஸ்ட் (5 போட்டிகளை) தொடரின் முதல் 3 ஆட்டத்தில் ஆஸ்தி ரேலிய அணி அசத்தலாக வெற்றி பெற்று 3-0 என்ற கணக் கில் தொடரை கைப்பற்றியது. இன்னும் 2 ஆட்டங்கள் மீதம் உள்ள நிலையில், மெல்போர்னில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியின் பொழுது இங்கிலாந்து அணிக் குழுவினர் மூலம் ஆஷஸ் தொடருக்குள் கொரோனா புகுந்தது. இங்கிலாந்து அணி வேகப்பந்துப் பயிற்சியாளர் ஜான் லூயிஸ், சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளர் ஜீதன் படேல், உடற்பயிற்சி நிபுணர் டேரன் வெண்டஸ் ஆகியோர் மற்றும் அவர்களின் 4 குடும்ப உறுப்பினர்கள் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  

போட்டி நடுவரும் முன்னாள் ஆஸி. வீரரு மான டேவிட் பூன் கொரோனாவால் பாதிக்க ப்பட்டுள்ள நிலையில்,  பிரிஸ்பேனில் நடை பெற்ற முதல் டெஸ்டில் சதமடித்த (151)  ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பேட்டர் டிராவிஸ் ஹெட் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளார்.  தற்போதைய நிலையில் வீரர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பதால் ஆஷஸ் தொடரை நடத்தும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கொரோனா பரவல் குறித்து அடுத்து என்ன செய்வது? என ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிக் பேஷ் லீக்கும் சிக்கல்

பிக் பேஷ் லீக்கும் சிக்கல் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய நாட்டின்  உள்ளூர் தொடரான பிக் பேஷ் லீக் தொட ரில் சிட்னி தண்டர் அணியைச் சேர்ந்த 4 வீரர்கள், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியைச் சேர்ந்த 7 வீரர்கள் என மொத்தம் 11 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோக ஊழியர்கள் 8 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொடர்ந்து ஆட்டம் காட்டி வருவதால் தொடரை தொடர்ந்து நடத்துவதா? இல்லை தள்ளிப்போடுவதா? என சிக்கலில் பிக் பேஷ் லீக் நிர்வாகம் விழித்து வருகிறது.