games

img

ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய பிரபல சிஎஸ்கே வீரர்  

ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக சிஎஸ்கே வீரர் ஆடம் மில்ன் விலகியுள்ளார்.  

நடப்பாண்டுக்கான 15ஆவது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. 33ஆவது லீக் ஆட்டம் இன்று மாலை 7.30 மணிக்கு டிஓய் பாட்டீஸ் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.  

இந்நிலையில் ஐபிஎல் 2022லிருந்து காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தீபக் சாஹர் முழுமையாக வெளியேறியுள்ள நிலையில், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றொரு வீரரான ஆடம் மில்ன் காயம் காரணமாக விலகியுள்ளார்.  

நியூசிலாந்தைச் சேர்ந்த ஆடம் மில்னை ஏலத்தை ரூ.1.90 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் தேர்வு செய்தது. இவர் ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக விளையாடினார். பின்னர் காயம் ஏற்பட்டதால் மற்ற ஆட்டங்களில் பங்கேற்கவில்லை.  

இவருக்கு மாற்று வீரராக 19 வயதுடையோருக்கான உலக கோப்பையில் விளையாடிய இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீசா பதிரனாவை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.20 லட்சத்துக்கு தேர்வு செய்துள்ளது. 

;