games

img

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா 2022

விளையாட்டு உலகில் முதன்மையான திருவிழாவான உலகக்கோப்பை கால்பந்து தொடரின்  22-வது சீசன் அரபு நாடான கத்தாரில் நடைபெற்று வருகிறது.

'போர்ச்சுக்கல் கோல் மழை

22-வது சீசன் உலகக்கோப்பை தொடரின் கடைசி நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணியும், சுவிட்சர்லாந்து அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய போர்ச்சுக்கல் அணி, பிரம்மாண்ட முன்கள தாக்குதலை தொடுத்தது. ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் வீரர் ரமோஸ் கோல் கணக்கை துவக்க, 33-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரர் பெபே கோலடிக்க சுவிஸ் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இரண்டாம் பாதியின் 51-வது நிமிடத்தில் ரமோஸ் (போர்ச்சுக்கல்) மீண்டும் கோலடிக்க, அடுத்த 4 நிமிட இடைவெளியில் ராபேல் (55-வது நிமிடத்தில் - போர்ச்சுக்கல்) கோலடித்து அசத்த சுவிஸ் வீரர்கள் சோர்வடைந்தனர். சோர்வை போக்க சுவிஸ் வீரர் மானுவேல் 58-வது நிமிடத்தில் கோலடிக்க ஆட்டம் சற்று பரபரப்பானது. கோலடிக்க துவங்கியதால் சற்று ஆறுதல் மனதுடன் அடுத்த கோலுக்காக சுவிஸ் அணி ரசிகர்கள் தங்கள் அணியை கை தட்டி உற்சாகப்படுத்தினர். ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் ரமோஸ் ஹாட்ரிக் கோலடிக்க, தோல்வியின் பாதையில் நாம் இருக்கிறோம் என்பதை உணர்ந்து சுவிஸ் ரசிகர்கள் கதறி அழுதனர். அடுத்தது பல முறை முயற்சி செய்தும், சுவிஸ் அணியால் மேற்கொண்டு கோலடிக்க முடியவில்லை. 5-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டத்தின் இறுதிக்கட்ட நிமிடத்தில் (90+2) போர்ச்சுக்கல் வீரர் லியாவோ கோலடித்தார். இறுதியில் 6-1 என்ற கோல் மழையில் போர்ச்சுக்கல் அணி அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. 

போர்ச்சுக்கல் அணிக்குள் பிளவு?

கால்பந்து உல கில் கணிக்க முடியாத அணியான போர்ச்சுக்கல் நடப்பு சீசனில் பிரம்மாண்ட பார்மில் உள்ளது.  ரொனால்டோ, பெபே ஆகியோர்  மட்டுமே சீனியர் வீரர்கள். மற்ற  அனைவரும் பயமரியா இளம் வீரர் கள் என்பதால் கலக்கலான ஆட்டத்துடன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது போர்ச்சுக் கல். சுவிஸ் அணிக்கெதிரான நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் ஒரே ஒரு அதிர்ச்சி சம்ப வத்தால் கால்பந்து உலகில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. அது யாதெனில் கால்பந்து உலகின்  நட்சத்திர வீரரும், போர்ச்சுக்கல் அணியின் கேப்டனுமான ரொனால்டோ தொடக்கத்தில் களமிறங்காமல்  பெஞ்சில் அமர்ந்து இருந்தார். இது வேறு ஏதாவது வியூகமாக இருக்கலாம் என்று எண்ணப்பட்டது.  ரொனால்டோ இல்லாமல் போர்ச்சுக்கலின் இளம் கன்றுகள் கோல் மழை பொழிய, அந்த அணியின்  பயிற்சியாளர் சான்டோஸ் ரொனால்டோவிற்கு தொடர்ந்து ஓய்வு கொடுத்து ஆட்டத்தின் 73-வது நிமி டத்தில் களமிறக்கினார். ஆட்டத்தின் பெரும்பாலான நேரம் பெஞ்சில் இருந்ததால் ரொனால்டோ  நாக் அவுட் சுற்றில் கோலடிக்கவில்லை. கேப்டன் ரொனால்டோ இல்லாமல் பயிற்சியாளர் சான்டோ ஸின் வியூகம் மற்றும் இளம் வீரர்களின் அபார ஆட்டத்தால் காலிறுதிக்கு முன்னேறிய போர்ச்சுக்கல் அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், ரொனால்டோ - பயிற்சியாளர் சான்டோஸ் இடையே  மோதலால் போர்ச்சுக்கல் அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், ரொனால்டோவின் ஈகோ பிரச்சனைதான்  காரணம் என பல்வேறு தகவல் வெளியாகியுள்ளது.

காலிறுதி ஆட்டங்கள்

குரோஷியா - பிரேசில்
நாள் : டிசம்பர் 9-ஆம் தேதி

அர்ஜெண்டினா - நெதர்லாந்து
நாள் : டிசம்பர் 10-ஆம் தேதி

போர்ச்சுக்கல் - மொரோக்கோ
நாள் : டிசம்பர் 10-ஆம் தேதி

இங்கிலாந்து -பிரான்ஸ்
நாள் : டிசம்பர் 11-ஆம் தேதி

இன்றும் ஓய்வு

உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு புதனன்று ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், வியாழனன்றும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளியன்று இரவு காலிறுதி ஆட்டங்கள் நடைபெறும்.

ஆப்பிரிக்காவின் பெயரை காப்பாற்றிய இளங்கன்று மொரோக்கோ

கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொட ரில் தற்போது நாக் அவுட் சுற்று நிறைவ டைந்து வெள்ளியன்று (டிசம்பர் 09) காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகிறது. செவ்வாயன்று நடை பெற்ற 7-வது நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் கோப்பை  வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட ஸ்பெ யின் அணி இளம் ஆப்பிரிக்க அணியான மொரோக்  கோவிடம் 3-0 என்ற கணக்கில் (பெனால்டி சூட்  அவுட்) வீழ்ந்து வெளியேறியது. 22-வது சீசனில்  வழக்கம் போல நாக் அவுட்டில் தென் அமெரிக்கா,  ஐரோப்பா கண்டங்களைச் சேர்ந்த நாடுகள் ஆதிக்கம்  செலுத்தி வருகிறது. ஆப்பிரிக்க கண்டம் இளங் கன்று மொரோக்கோ காலிறுதிக்கு முன்னேறிய நிலையில், சேர்ந்த நாடுகள் வெளியேறி விட்டது. வட அமெரிக்கா, ஆசிய கண்  டங்களை போல நாக் அவுட்டில் ஆப்பிரிக்க கண்டம் வெளியேறும் என எதிர்பார்க்கப்  பட்ட நிலையில், மொரோக்கோவின் அதிரடியால் ஆப்பிரிக்காவின் பெயர் இன்னும் கத்தார் சீசனில் சுழன்று வருகிறது.

யாருக்கு தங்க காலணி?

உலகக்கோப்பை தொடரில் அதிக கோலடிக்கும் வீரர்களுக்கு தங்க காலணி விருது வழங்கப்படும். இது உலகக்கோப்பைக்கு அடுத்து கால்பந்து உலகில் கவுரவமான பட்டம் என்பதால் தங்க காலணியை கைப்பற்ற ஒவ்வொரு சீசனிலும் முட்டு மோதல் அதிகமாக இருக்கும். நடப்பு சீசனில் நாக் அவுட் சுற்று நிறைவு வரை பிரான்ஸ் வீரர் மாப்பே முதலிடத்தில் உள்ளார். மொரட்டா (ஸ்பெயின்), மெஸ்ஸி (அர்ஜெண்டினா), ராஷ்போர்ட், சாகா (இங்கிலாந்து), கிரௌட் (பிரான்ஸ்), வேலன்சியா (ஈகுவடார்), காக்போ (நெதர்லாந்து), ரிச்சர்லிசன் (பிரேசில்), ராமோஸ் (போர்ச்சுக்கல்) என 9 வீரர்கள்  3 கோல்களுடன் தங்க காலணியை பெற வரிந்து கட்டி வருகின்றனர். தங்க காலணி டாப் ஆர்டர் பட்டியலில் கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்கள் நெய்மார்( பிரேசில்), ரொனால்டோ  (போர்ச்சுக்கல்) ஆகியோர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.