பிரேசிலுக்கு 3 முறை (1958, 1962, 1970) உலகக்கோப்பையை வென்று கொடுத்த கால்பந்து ஜாம்பவான் பீலேவின் (82) உடல்நிலை நாளுக்குநாள் மோசமடைந்து வருவதாக அவர் சிகிச்சை பெற்று வரும் சாவ் பாலோ யூத மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. மருத்துவமனை அறிக்கையின் படி,”புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பீலேவிற்கு சிறுநீரகம், இதயம் செயலிழக்கும் நிலையில் இருப்பதாகவும், கொரோனா வேறு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், செயற்கை சுவாசம் மூலம் பீலேவை காப்பாற்ற மருத்துவர்கள் இறுதிக்கட்ட முயற்சியில் போராடி வருகிறோம்” என கூறப்பட்டுள்ளது.