games

img

கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவின் மகன் உயிரிழப்பு

கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், போர்ச்சுக்கல்  நாட்டின் கேப்டனுமான  கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகன் பிறந்த சில நிமிடங்களில் இறந்துள்ள  தாக ரொனால்டோ மற்றும் தனது மனைவி ஜியோர்ஜினா கையெழுத்துடன் டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.  தங்களுக்கு இரட்டை குழந்தை பிறக்கப் போவ தாக ஏற்கெனவே ரொனால் டோ கூறியிருந்த நிலையில், பிரசவத்தில் பெண் குழந்தை மட்டுமே பிறந்துள்ளது. ஆண் குழந்தை உயிரிழந்தது.  ரொனால்டோவுக்கு ஏற்கெனவே 4 குழந்தைகள் உள்ளன.  கிறிஸ்டியானோ ஜூனியர், மேடியோ என்ற 2 மகன்களும்  ஈவா மற்றும் அலனா என்ற 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோகத்தில் சமூக வலைத்தளம்

சமூக வலைத்தளத்தின் விளையாட்டு பிரிவில் அதிக பாலோயர்களை (பின்பற்றுபவர்கள்) கொண்டவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. அவரது குழந்தை இறந்ததாக  தகவல் வெளியாக சோக இமோஜிகள்  மற்றும் மீம்ஸ்கள் அதிகமாக டிரெண்ட் ஆகி வருகின்றன.

சந்தோஷ்  கோப்பை கால்பந்து 

இன்றைய ஆட்டங்கள் 
பஞ்சாப்- ராஜஸ்தான் 
மாலை 4 மணிக்கு

மேகாலயா - கேரளா 

இரவு 8 மணிக்கு 
இரண்டு ஆட்டங்களும் கேரள மாநிலம் மலப்புரத்தில் நடைபெறுகிறது. 
(75-வது தேசிய அளவிலான சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள் கேரள மாநிலம் மலப்புரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது)